13 Jun 2010

ஜாஸ்மின் வெற்றி-குஷ்புவின் கருத்து?

 ஜாஸ்மின் இந்தவருட 10 ம் வகுப்பு தேற்வில் முதல் இடம் பெற்ற நெல்லை மாநகர பள்ளி மாணவி ஆவார். சமீபத்தில் குஷ்பு பேசிய போது தமிழக முதல்வரின் சாதனையாக  இதை குறிப்பிட்டார். மேலும் ஒரு தகவல் கூறினார்,ஜாஸ்மினுடைய தகப்பனார் வீடு வீடாக சென்று துணிவிற்ப்பவர் என்றும் , இப்படியுள்ள சூழலில் படித்த ஜாஸ்மின் முதல் இடம் பெற்றது முதல்வரின் சாதனை என்று.



ஜாஸ்மினுடைய அறிவாற்றலை கேலி செய்வதாகவே உள்ளது. என்ன முதல்வர் ஜாஸ்மினுக்காக பரிட்சை எழுதினாரா?. ஜாஸ்மின் படித்த பள்ளியை நோக்கின் த்மிழக அரசின் சாதனை புரியும். மாநகர பள்ளி ஆக இருந்தும் போதுமான வசதியற்ற பள்ளி இது. பழைய பேட்டையில்  குற்றாலம் செல்லும் ரோட்டு ஓரம் அமைந்துள்ளது.பள்ளியின் வாசல் துர்நாற்றம் வீசும் பொது ஓடை, போதுமான இடவசதியற்ற முற்றம் என அரசு பள்ளியின் முகமுத்திரயுடன் காட்சி  அளிக்கின்றது.பெண்கள் பள்ளியாக இருந்தால் 5 முதல் 8 ஏக்கர் சுற்றளவு இருக்க வேண்டும். இப்பள்ளியின் சுற்றளவு ஒரு ஏக்கர் கூட இருக்க வாய்ப்பு இல்லை.அங்கு படித்த ஒரு மாணவி  மூலமாக  அறியபட்டது சுகாதாரமுள்ள கழிப்பிட வசதி கூட இல்லை என்பதே. ஜாஸ்மின் பெயரில் விளம்பரம் பெரவேண்டும் என விரும்பும் அரசு   செய்யவேண்டியது மாணவியின்  இனியுள்ள பள்ளி  செலவை ஏற்ப்பது, வேலைக்கு உத்திரவாதம் அளிப்பது என்பதுதான்.

பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்து வழங்கும் பாராட்டு விருதுகள் எல்லாம் மாணவர்கள் நலனுக்கு உதவுகின்றதா என்றால் கேழ்விக்குறியே.பல்கலைகழக விருதுகள்(gold medal) வழங்கும் நிகழ்வுகளை   மாணவர்களுக்கு வழங்கும் ஒரு பாராட்டு விழா என்றால் கிடையாது என்பதுதான் உண்மை. அமைச்சர்களுக்கு மதிப்புவழங்குவதற்க்கும் ,அமைச்சர்கள்  தங்கள் கருத்துக்களை உரைக்கும் தளம் ஆகவே உள்ளது. அமைச்சர்களின் பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் கூத்துக்களை கண்டு ரசிக்கலாம்.

விருது என்ற பெயரில்  அளிக்கப்படும் மெடலுடன் வேலைவாய்ப்பும் அளித்தால் சிறப்பாக கருதலாம்.  இல்லாவிடில் மெடல் மட்டும் பெறபடுவது கேலிகூத்தாகவும் சிலவேளைகளில் உணரபடுவதும் உண்டு. நான் பெற்ற  மெடலை  என் வகுப்பு தோழனிடம் காண்பித்தபோது இதுக்கு 50 ரூபாய் மதிப்பு வரும்.  தங்கம் அல்ல தங்கம் பூசிய தகரம் என கூறினான் . எனக்கு  அதிர்ச்சியை  கொடுத்தது. ஒரு வேளை ஒரு வேலை வாய்ப்பு கொடுக்க பட்டால் விருதுக்கு பதின் மடங்கு மதிப்பு கூடியிருகும். முயற்ச்சியுடன் படிப்பவர்களுக்கு  ஒரு உற்ச்சாகத்தையும் கொடுத்திருக்கும்.

குஷ்புவிடம் மறுபடியும் வரவேண்டியுள்ள  காரணம் ,ஜாஸ்மின் சாதனையை கலைஞரின் சாதனையாக கூறியுள்ளார். ப்ள்ளி வாசலை காண இயலாத பெண்கள்,தெருவோரங்களில் பிச்சை எடுக்கும் பெண்கள்,  குப்பை பெருக்கும் பெண்கள் யாருடைய சாதனை. குஷ்புவின் கணவருக்கு கலைமாமணி விருது கொடுத்து குஷ்புவை  அரசுவின் ஊதுகுழல் ஆக்கியுள்ளார்கள் போலும்.  சுந்தர் தனது படங்ளில் பெண்களை பயன்படுத்துவது  பரிதாபத்துக்குரியதே. கெட்ட வார்த்தைகளில் திட்டுவது, காதல் காட்சிகளில் கூட  முரட்டு பயலிடம் பம்பரம் கிடைத்துள்ளது போல் கைய்யாளுவதை கண்டுள்ளோம்.குஷ்பு போன்றோர் நாய்க்கு எலும்பு துண்டு கிடைத்தால் வாலை ஆட்டி நிற்ப்பது போல் நன்றாகவே மனப்பாடம் படித்து ஒப்பிக்குகின்றனர். பெண்கள் நாயகி போல் பொது மேடைகளில் காட்சி தருகின்றார் பேசுகின்றார். தண்டு எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் என்பது இது தானோ?

0 Comments:

Post a Comment