28 Jun 2010

செம்மொழி

செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தை பகிர்ந்த  வலைப்பதிவை பார்த்த போது தமிழ் சினிமா காமடி மாதிரி இருந்தது. தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக்க வேண்டுமாம்.  தமிழகத்திலயே வழியே காணும். நம்மை அறிவாளின்னு காட்டிக்க ஆங்கிலம் தெரியாவிடிலும் தங்லிஷிலாவது  பேச வேண்டியுள்ளது. தண்ணிர் பிடிக்கும் பம்படியில் கூட அக்கா, மறைந்து மேடம் போட்டு பேசும் வழக்கம் வந்து வெகுநாளாகிவிட்டது. இதிலும் இந்த தமிழங்க இருக்காங்ளே வரட்டு கவுரவ பார்டீங்க!


என் மகனின் பள்ளி தோழனின் அம்மா என்னை மேடம் என அழைத்து பேசினாலும் நான் அக்கா என்று அழைக்கவே விரும்புவேன். அதனாலயே அவுங்க அவ்வளவாக என்னிடம் பேசமாட்டாங்க.  இதில் தொலைகாட்சியின் பங்கும் பெரிதுள்ளது. மலையாள சானலை பாருங்க சேச்சி (அக்கா),அம்மச்சி(அம்மா),சேட்டா(அண்ணா) என்ற சொற்களை தான் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் விரும்பி பயன்படுத்துவர். நம் தமிழ் மொழி சானல்  தொகுப்பாளிகள் தான்  மேடம்,சேர்,என்ற பதங்களை குப்பம்மாவுக்கும் சுப்பம்மாவுக்கும் அறிமுக படுத்தி கொடுத்து கொண்டிருப்பவர்கள்.


சமீபத்தில் ஒரு நேர் காணலுக்கு செல்ல வேண்டியிருந்தது, என்னுடைய புத்திசாலித்தனத்தை விட ஆங்கிலத்தில் உரையாடும் தகுதியால் மட்டுமே அளக்கபட்டேன்.


இந்த மாநா(னா)டு தீருமானமெல்லாம் போடுவதர்க்கு பதிலாக தமிழை எளிய முறையில், சுவாரசியமுடன் கற்ப்பிக்கும் முறைகளை கையாள  வேண்டும், கணிதம், அறிவியல் போன்ற பாடஆசிரியர்களை விட தமிழ் ஆசிரியைதான் என் குழைந்தைகள் பயப்படுவார்கள். பொதுவாக தமிழ் கற்ப்பிக்க ஆண்
 ஆசிரியர் கிடைத்தால்  ஓரளவு தப்பித்து விடலாம், பெண் வாத்தியாருங்க
 பேச்சு செயல் எல்லாமே  வெறுப்பை/சலிப்பை கொடுக்கும்.  வார்த்தைகள் அடாவடித்தனம்  நிறைந்ததாக  இருக்கும்.  மாணவர்களை மாடுகளை போன்று கையாளுவார்கள். பள்ளியில் பாருங்க தமிழ் ஆசிரியை தான் எண்ணை வடிஞ்ச முகத்துடன் கடுகு வெடிப்பது மாதிரி, அழகு ரசனை அற்ற உடை அலங்காரத்துடன் வருவர். கோபம் வந்தால் வாயில் இருந்து வரும் வார்த்தை எருமை,நாய்,மாடு ,சனியன் என்றே இருக்கும்..


நாங்க கேரளாவில் பிறந்து கேரளாவிலே வளர்க்கபட்டோம். பொது இடங்களில் தமிழ் பேசினால் மதிப்பை பெற இயலாது. ஆகையால் பேச்சு மொழியாக மலையாளத்தையும் கற்று கொண்டோம்.வீட்டில் பெற்றோரிடம் ,உறவினர்களிடமும் தமிழில் பேசியே மகிழ்ந்தோம். ஆனால் சில          தமிழர்கள் சிறப்பாக  பீர்மேடு,குட்டிகானம்,ஏலப்பாறை,போன்ற இடத்தை சேர்ந்த தமிழர்கள் மூக்கு வழியாக மலையாளத்தில் தான் முக்கி முக்கி பேசுவாங்க. தமிழ் பேசும் தமிழ்ர்களை பச்சை மலையாளியை விட கேவலமாக பார்ப்பார்கள்.


இன்னும் வேரு ரக தமிழர்கள்,சாத்தான்குள்ம், திருநெல்வேலியை சேர்ந்தவங்க  மலையாள மொழியை சுட்டு போட்டாலும் பேச மாட்டேன் என்று அடம் பிடிப்பாங்க..மலையாளிங்க கேணைன்னு கிண்டல் அடித்தாலும் பாண்டினு அழைத்து கேலி செய்தாலும் கண்டுக்காம நடந்துக்குவாங்க.ஏன்னா அவர்கள் மொழி பரிச்சயம் இல்லாததால் பேச இயலாத மையாகிவிடுவார்கள்.எங்களை போன்ற தமிழர்களுக்கு அவர்கள் மொழியும் படித்துள்ளதால் கிண்டல் அடித்தாலும் பதில் வழக்காடி அவர்களுக்கு இணையாக வாழ,பேச பழகியிருந்தோம்.பாண்டினு அழைத்தால் உங்க கொள்ளு தாத்தா தமிழர் தானே,உங்க மலையாளமொழியின்  தாய் மொழியே தமிழ்தான்னு கூறி தமிழையும் கத்து கொடுத்துடுவோம்.



எந்த மொழியானாலும் தெரிந்திருதால் பலம் தான். 
ஆனால் மலையாளமும் தமிழும் அற்ற களியாக்காவிளை போன்ற இடைத்தை சேர்ந்த தமிழர்களை என்ன சொல்வது என்று தான் தெரியவில்லை.மலையாளமும் பேசாது, தமிழும் பேசாது  கலவரம் கொண்டு அலையுவாங்க.  எங்க பல்கலைகழகத்தில் ஆசிரியர், மாணவர்கள் என பெரும் பகுதி இவர்களால் ஆக்கிரமிக்க பட்டுள்ளது. இளுத்து அழுது ஒரு மலையாளம் அல்லாத தமிழ் பேசி அறிவாளின்னு  படம் காட்டியே பொழைச்சு போறாங்க. செம்மொழி மாநாட்டிலே இவங்களுக்கு தமிழ் பேச கத்து கொடுக்க ஒரு தீருமானம்  போட்டிருந்தால் வரவேற்று இருக்கலாம்.
அவர் அவருக்கு அவர் மொழிதான் செம்மொழி! 




சதான் ஹுசைன் சொல்லியுள்ளார்,என்னடா இங்கிலிஷ், புஷ்,தஷ்ன்னு நம்ம அரபி மொழி போல்வருமா? ஆக கையாள தெரிந்த மொழியெல்லாம் அவரவருக்கு செம்மொழியே!

1 comment: