27 Aug 2010

அவனும் நானும்!

பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்த தனது கல்லூரி தோழியை, குடிபோதை  லாரி ஓட்டுனரால் கொல்லபட்ட சோக நிகழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருந்தார். எனக்கு மிகவும் கவலையளித்தது. ஆர்வ மிகுதியால் நட்பா, அல்லது காதலா என வினைவினேன். அது நட்பையும் கடந்தது.  ஆனால் காதல் அல்ல  என்றார்.!!!!  உண்மையில் இந்த விதமான உறவு நம் வாழ்க்கையிலும் கடந்து செல்வது உண்டு. நெருக்கமான நட்பு, தன்னலமற்ற அன்பு, காமமற்ற அன்பு என கூறி கொண்டே போகலாம். இவ்விதமான நட்பு பற்றி எண்ணி கொண்டிருக்கையில் எனது மனம் சர்ர்ர்ர்…. என 30 வருடத்தை பின்னோக்கி சென்றது.

 சபீர், என்ற என் தோழன் என்னுடன் டுயூஷனில் படித்தான். அவனும் நானும் போட்டி போட்டு படிப்போம். அவன் கணக்கு பாடத்தில் திணறி படித்தான்.  நான் பல முறை வீட்டு பாடம் முடிக்க உதவியுள்ளேன்.   அவனுக்கு என தின் பண்டங்கள் எடுத்து சென்றுள்ளேன்.  அவனுக்கு  கவலை என்றால் அன்று எனக்கு அந்த நாள் மகிழ்ச்சியாக இருக்காது.  அவன் ஒரு நாள் வரவில்லை என்றால் அவன் வீட்டுக்கு போய்  அவன் அம்மாவிடம் விசாரிக்காது மனம் அமைதி கொள்ளாது.  விடுமுறை நாட்களில் அவனை பார்க்க அவனுடைய வீட்டுக்கு சென்று வருவோம். அவனுடைய அப்பா கண் சிவப்பாக கோழிமுட்டை மாதிரி இருக்கும்.  சிரிக்கவோ, முறைக்கவோ மாட்டார். அவர் எங்கள் பகுதியிலுள்ள பெரும் தொழில் அதிபராக இருந்தார்.

சபீரின் அத்தை மகன் இந்த அடத்தில் உள்ளான்
பள்ளியில் யாராவது அடித்துவிட்டால் அவனுடைய தோழர்களிடம் சொன்னால் என் எதிராளிகளை கவனித்து விடுவார்கள். அம்மா என்னை 4 வயதில் டுயூஷன் அனுப்பி விட்டார்கள்.அப்போழுது எங்கள் ஊரில் பாலவாடி அல்லது ஆங்கில L.K.G,U.K.G வகுப்புக்கள் இருந்ததில்லை. கிளாடிஸ் டீச்சர் வீடு தான் எங்கள் பள்ளி! எங்கள் கிளாடிஸ் டீச்சர் அழகாக இருந்தார். ஆனால்  அவருடைய முகம்  அவர் வாழ்கை  போராட்டம் பற்றி சொல்லி கொண்டிருந்தது.


டீச்சரின் கணவர் காச நோயால் பாதிக்க பட்டிருந்தார். மகனும் முரடணாக இருந்தான்.  டீச்சரின் வீட்டில் விறகு அடுப்பு என்பதால் விறகு சரியில்லை என்றால் நாங்கள் புகை மூட்டத்திற்க்குள் தான் இருக்க வேண்டும்.  டீச்சரின் மகள் தனக்கு இருக்கும் காட்டத்தை கடுகு தாளிக்கும் போது வெளிப்படுத்துவார்.  ஒருவர் ஒருவராக நாங்கள் இரும ஆரம்பிப்போம். அது போகப் போக ஒரு பொழுது போக்காகவே மாறியது.  டீச்சர் மகள் எப்போழுது கடுகு தாளிப்பார் என காத்திருக்க தொடங்கினோம்.... தும்முவதற்க்காய்! டீச்சரின் அம்மா மிகவும் அழகான உயரமான  சற்று மனநலம் பாதிக்க பட்டிருந்தார்.   அவருடைய வேலையெல்லாம் கோழியையும்  குஞ்சுக்களையும் பராமரிப்பதே. அம்மா கோழிகளுடன் குஞ்சு கோழிகள் செல்வதே பார்த்து கொண்டு இருப்பது என் பொழுது போக்காக இருந்தது.

டீச்சருக்கு மூன்று தங்கைகள் இருந்தனர் ஒருவர் அப்போழுதுதான் திருமணம் ஆகியிருந்தார். இளைய தங்கை துணி தைத்து கொண்டே இருப்பார். யாரிடமும் அவ்வளவு பேசுவது   இல்லை. அவர் எப்போழுதாவது  கடைக்கு   செல்வார்.  அவர் சேலை கட்டி முடிக்க  ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆகும்.  குட்டி-கூறா பவுடர் இடுவது தான்  புல் ஸ்டாப்!,  மேக்கப் முடித்து விட்டார், இனி விடைபெற போகின்றார் என்ற குறியீடாக இருந்தது. மேலும் பவுடர் மணம் இதமான மணமுள்ள காற்றை தந்தது எங்களுக்கு.                                                                                                                      
                                                                                                                                                                                ரீச்சருக்கு 3 சகோதரர்கள் உண்டு .  ஒருவர் பள்ளி ஆசிரியர் பயிற்சி பெற்றுகொண்டிருந்தார்   நான்  சேட்டை செய்தேன் என்று   அவரிடம் நிறைய அடி வாங்கியுள்ளேன்.   இனி ஒரு சகோதரர்; வீட்டுக்குள் காலெடுத்து  வைத்தவுடனே அவர்கள் வீட்டில் மகாபாரத போர் ஆரம்பித்து விடும் . சட்டி பானை எல்லாம் எடுத்து எறிவது உடைப்பது போன்ற சத்தம் கேட்கலாம் . முதல் சகோதரர் ஒரு வாகன ஓட்டியாக இருந்துள்ளார். விபத்தில் சிக்கி நடு முதுகு தண்டவடம் ஒடிந்து படுக்கையில் இருந்தார்.  அவர் தான் அங்கு அரசர் மாதிரி.   தண்ணீர், சாப்பாடு என அவரை  நல் முறையில் கவனித்து கொள்வார்கள்.  அவரிடம் அவர்கள் வீட்டில் அனைவரும் நடுங்கி நிற்பார்கள். சிலவேளைகளில் அக்குடும்ப சண்டையின் தீர்ப்பு வழங்கி கொண்டிருப்பார், சில வேளைகளில் அவர் நண்பர்களுடன் அரசியல் கதைத்து கொண்டிருப்பார். அவருடைய சத்தம் மட்டுமே எங்களுக்கு பரிசயமாக இருந்தது, . அவருடைய உருவம் சத்தம் எல்லாம் எனக்கு ஒரு வித பயத்தை கொடுத்துள்ளது. கிட்ட போய் பார்ப்பது கிடையாது. 



எனது குழந்தை பருவத்தில் , அதிக நேரம் எனது வீட்டை விட அங்கு இருந்தது போல் தான் உணருகின்றேன்  .எனது வீட்டில் எனது சகோதரனும் சகோதரியும் சிறு பிள்ளைகளாய் இருந்ததால் எனக்கு கிடைக்க வேண்டிய நிறைய சலுகைகள் மறுதலிக்கப்பட்டது. பல வேளைகளில் விட்டு கொடுக்கும் சூழலுக்கும் தள்ள பட்டேன்.  அதனால் டுயூஷன் வீட்டில் நான் செல்ல பிள்ளையாகவே வளர்ந்தேன்.

அங்கு காலை தமிழும், மதியானத்திற்கு மேல் மலையாள மொழியும் கற்று கொண்டேன்.  பள்ளியில்  சேர்த்த போது அம்மா, தாய் வழி கல்வி என்ற நோக்குடன் தமிழ் வகுப்பில் சேர்த்து விட்டார்கள்.  எங்கள் ஆசிரியை ‘குழந்தை டீச்சர்'(பெயர்).  முகம் எப்போழுதும் போர்களத்தில் நிற்பது போன்றே இருக்கும். மேலும் தமிழ் ஆசிரியர்கள், வித விதமாக அடித்தார்கள். சிலர் கை மொழியில் அடிப்பின் , சிலரோ தொடையில் கிள்ளுவர், சிலர் கட்டிபிடித்து கவுகூட்டு பக்கம் தேடி நுள்ளி வைப்பர். இலங்கயில் தமிழ் மக்களுக்கு ஆர்மிகாரர்கள் தெரிந்தது போலவே எனக்கு தமிழ் ஆசிரியர்கள் தோன்றினர். மேலும் எனது தோழன் சபீர், பமீஜா,போன்றவர்கள் மலையாளம் வகுப்பில்  இருந்ததால், அம்மாவிடம் சண்டை பிடித்து மலையாளம் வகுப்பில் சேர்ந்து கொண்டேன். அஸீஸ் சார், அயிஷா பீபி டீச்சர் எனக்கு ரொம்ப பிடித்திருந்தனர்.  பேபி டீச்சருக்கு நான் மலையாளம் பள்ளிக்கு சென்றதில்  துளியும் விருப்பம் இல்லை, கோபவும் கொண்டார்.

நானும் அவனுடைய வகுப்பில் கிட்ட கிட்ட உட்கார்ந்து கொள்வோம்.  எங்கள் நட்பு நன்றாக சென்றது. அவனுடைய கூட்டாளிகள் அப்பாஸ், ராஜன், ஜெயன் போன்றோர் எனக்கும் கூட்டாளிகள் ஆகினர். அதில் ராஜன் 2 வகுப்பு படிக்கும் போது வேறு பள்ளிக்கு சென்று விட்டான் இருந்தாலும் கடிதம் எழுதி கொள்வோம்.  ஒரு முறை அவனுடைய அப்பாவுடன்  எங்கள் வீட்டிற்கு என்னை பார்ப்பதற்கு  வந்திருந்ருந்தான் .  பின்பு அவனை கண்டதே இல்லை.

 பிந்து, மோன்சி, ஜெயா, ரமலத்து, ரஷீதா, லதா, போன்றவர்கள் வகுப்பு  தோழிகள் ஆகினர். சவுதாம்மா என்ற ஒருத்தி எங்கள் வகுப்பில் இருந்தாள் அவள் என்னை அடிப்பாள். அவளுடைய முகம் அம்மை வந்த தழும்புக்களால் பார்க்க கொஞ்சம் பயமாக இருந்தது. இவளை சரிகட்ட ஜெயாவின் உதவி தேவை பட்டது. ஒரு முறை சவுதாவை ஜெயா விரட்டி விரட்டி எனக்காக அடித்து விட்டாள்.  பின்பு என்னை பார்த்தால் பயந்து ஒதுங்கி சென்று கொண்டிருந்தாள்  அதன் பின் நாங்கள் உற்ற  தோழிகள் ஆகினோம். (ஜெயா தனது 21 வது வயதில் தன் மூன்று சகோதரிகளுடன்  குளத்தில் விழுந்து  தற்கொலை செய்து கொண்டாள்.)

வெள்ளி கிழமைகளில் எங்களுக்கு மதியம் மாணவர் கூட்டமைப்பு சம்மேளனம் நடக்கும்.  மாணவர்களே சேர்ந்து பாட்டு ,நடனம், பேச்சு என தொகுத்து வழங்குவோம்.எ ல்லோரிடம் காசு சேர்த்து; மிட்டாய், சந்தனம் வாங்கி பகிர்ந்து அளித்து வெள்ளி கிழமை என்பது எங்களுக்கு பெரும் விழா போன்றே இருக்கும்.  எங்கள் பகுதியில் கிடைக்கும் உண்ணி பூக்கள் கொண்டு மேசையை அலங்கரிப்போம்.

4  வது வகுப்பு வந்த போது ஆண்,பெண் என்ற பெரும் சண்டையில் உடைந்தது சபீறுடன் ஆன எனது தோழமையுமே.  அவனுடன் பேசினால் எங்கள் பெண்கள் சங்கத்தை அவமதித்தது போன்று ஆகி விடும் என்பதால் அவனை பார்த்தால் பேசுவதே இல்லை, 5-ம் வகுப்புக்கு பின்பு இரு பாலருக்கும் தனி தனி வகுப்பறை என்பதால் அவனை பார்க்கும் சூழலே அற்று போனது.  7 ம் வகுப்பு வந்த போது பள்ளி மாணவர் தலைவர் பதவிக்கு  எனக்கு ஓட்டு போட அவனிடம் கேட்டிருந்தேன்.  அவன் எனக்கு தான் ஓட்டு போட்டிருப்பான்/

பின்பு 10 வகுப்பு வந்த போது ஒரே வகுப்பில் டியூஷனில் கற்றோம்.  சிறு சிரிப்பை தவிற பேசி கொள்ளும் வாய்ப்பே உருவாக்கி கொள்ளவே இல்லை.   எங்கள் தோழமை அவன் மனதிலும் மாறாது இருந்துள்ளது என பின்பு அறிந்தேன் இன்னொரு பள்ளி நண்பன் வழியாக.  நான் மேற் கல்வி என வேறு பிரதேசம் சென்ற போது அவன் வியாபாரத்தில் வந்து விட்டான் அவனது தந்தையை போன்று.

திருமணத்திற்கு பின்பு எனது கணவருடன் அவன் கடைக்கு சென்ற போது கதைத்திருந்தேன்.  அவனுக்கு 3 குழந்தைகள் உள்ளதாக கூறினான். அவனுடைய குழந்தைகள், மனைவியை காண என்னை அழைப்பான் என நினைத்தேன் ஆனால் அவனுடைய மன நிலை எவ்வாறாக இருந்தது என தெரியவில்லை.  ஆகினும் நட்பு, அதையும் தாண்டி புனிதமான அன்பு அழியாதது என்று மட்டும் என் மனம் சொல்லியது!




23 Aug 2010

நல்ல கற்பனைகளும் கனவுகளும்





பதில் இடுகை வழியாக ஒரு பதிவரின் வலைப்பதிவை வாசிக்க பெற்றேன். 2035ல் ராஜபக்சே, பிராபகரன், சீமான் போன்றோரின் நிலையை பற்றி கற்பனையில் ஒரு பதிவு எழுதியிருந்தார். சில பகுதி ரொம்ப வன்மம் கொண்டதாக இருந்தது. இருப்பினும் ஈழப்போர் விடுத்த கடுமையான மனபோராட்டத்தை எண்ணியபோது அவர் எதிர் கொண்ட போரின் தாக்கத்தை வேறுவிதமாக கொட்டியுள்ளார் என எண்ணிகொண்டேன். அந்த பதிவிற்க்கு பதில் இடுகைதான் என்னை அதிற்ச்சி பெற செய்தது.  மறுஇடுகையில் ஒருவர் எழுதியுள்ளார் தென்தமிழகத்தில் பூமி அதிற்வு வந்து 3 லட்சம் பேர் மாண்டு போவார்ளாம் 2035! என்ன ஒரு கற்பனை வளம் என பாருங்கள் (26 -வருட ஈழ இன படுகொலையில் மாண்டுபோன மக்கள் 1 லட்சம் பேர்! )நம் மக்கள்,எதிற்மறையான கனவுகள் கற்பனைகளை விட நல்ல கனவுகள் காணலாம்.  யஹூத மக்கள் தங்கள் தேசம் ஒரு நாள் கிடைக்குமென தீர்க்கமாக கடவுளின் பெயரால் நம்பினர், எடுத்து காட்டாக ‘ஷிண்டேஸ் லிச்ட்டு’ ஸ்டிவன் ஸ்பீல் பெர்கின் திரைபடத்தில் அவர்களுடைய நிலையை சரியாக சித்தரித்திருப்பார்.  http://www.newsandentertainment.com/zMschindler.html.  இவ்வளவுத்துக்கும் தன் உடல் பலத்தைவிட மன பலத்தையே நம்பினர், அதே போல் தங்களுக்கு என ஒரு தேசத்தையும் பெற்று விட்டனர். சமீபத்தில் எனது பேருந்து தோழியிடன் ஈழ செய்தியை பற்றி கதைத்து கொண்டிருந்தபோது இவ்வாறே கூறினார், வாழ்க்கை ஒரு சுழற்சி ஆகையால் தோல்வியும், ஜெயவும் நிரந்தரமல்லை என;  இன்று தோற்றவன் நாளை ஜெயிப்பான் என நம்பிக்கை கொண்டோம்.




ஒரு வயதான பாட்டியும் நானும் நேரம் கொல்வதற்க்காய் கதைத்துகொண்டிருப்பது உண்டு. பாட்டி முழு பொழுதும் தொலைகாட்சி பெட்டி செய்தி பார்ப்பவர். பாட்டி வழி செய்திகளின் நேரடி ஒளிபரப்பு  எனக்கும் வந்தடையும். எனக்கும் க்ரயம்(crime) செய்தி மேல் நாட்டம் இருப்பதால் ஆற்வமுடன் கேட்பேன். வர வர பாட்டி க்ரயம் செய்தி மட்டுமே தரவேண்டும் என்ற பிடிவாதத்துடன் மகா மோசமான கொலை, கொள்ளை,தகாத உறவு,கற்பழிப்பு என எனக்கென்றே தணிக்கை செய்தது, செய்தி தர ஆரப்பித்துவிட்டார்.




சில வேளைகளில் இப்பாட்டியுடன் எங்கள் பகுதியில் உள்ள குன்றை நோக்கி நடைபயிற்ச்சி செல்வதுண்டு.  ஒரு முறை பாட்டி தன் கற்ப்பனை கதையை கட்டவழ்த்து விடுகிறார், பூமி மட்டும் குலுங்கிச்சு, இந்த பாறைகள் உருண்டு வந்து இங்கு இருக்கும் வீடுகள் எல்லாம் உடைந்து சுக்கு நூறாக்கி விடும்.(முதல் வீடு எங்களுடையது?),அதும் தீர்க்கமாக செல்கின்றார் 2012 ல் பெரியொரு அழிவு திருநெல்வேலிக்கு உள்ளதாம். அதிலும் பாட்டிக்கொரு மகிழ்ச்சி சொந்த வீடு வைத்துருப்பவர்களும் தெருவுக்கு வந்திடுவாங்களாம் அப்போழுது வாடகை வீடு, சொந்த வீடு என எல்லோரும் ஒரே மாதிரி ஆகிடுவாங்களாம். பாட்டியின் கம்னியூசம் இப்படியும் போகுதே என எண்ணி நொந்து கொண்டு இருந்துவிட்டேன்.




சமீபத்தில் குடிசை மாற்று வாரியம் 302 வீடு எங்கள் பகுதியில் கட்டியுள்ளது. பேருந்து ,கடைவசதிகள் பெருகும் என நான் நினைத்து கொண்டேன். மேலும் எங்கள் ஏரியா தலைவர் அசைவ சாப்பாட்டு சாப்பிடுவது இல்லை என்பதால் அசைவ கடைகள்(ஆடு,கோழி,மீன்) வருவதற்க்கும் தடை விதித்துள்ளார் . அவருடைய அதிகார மையம் செயல் இழக்கும் என்பதில் தான் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் பாட்டியின் கூற்று படி தெருவின் அமைதி பறிபோயிடும்,மேலும் பூமி தண்ணீர் குறைந்து விடுமாம்.சுகாதாரம் கெட்டுவிடுமாம்.






இப்போழுது ஒரு தண்ணீர் தொட்டி கட்டி கொண்டுருக்கின்றனர். பாட்டி என்னை அழைத்து சொல்கின்றார், டாங்கு கட்ட நல்ல ஆழமாக தோண்டுகின்றார்கள். ஆஹா பாட்டியும் ஆக்க பூர்வ்மான சிந்தனை ஓட்டத்திற்க்கு வந்து விட்டார்களா என நிமிர்ந்து பார்த்தால், அடுத்த வார்தை தான் தூக்கி வாரி போட்டது; பயன்படுத்தும் கம்பி சரியில்லையாம்,கட்டி முடிக்கும் போது டாங்கு தலை குப்புற விழுமாம்,விழுவது மட்டுமல்ல எதிர்புறத்திலுள்ள வீட்டை அடித்து கொண்டு போய் விடுமாம். இப்போழுது பாட்டி என்னை பார்ப்பதற்க்குள்ளாகவே ஒளிந்துவிடுவேன். இதும் ஒரு போபியாவே.




சிறு வகுப்பில் படிக்கும் போது( 8-12 வயதுக்குள்)சண்டையிட்டு கொண்டால் உன் கண்ணை காக்கா கொத்தும், என வழக்கடித்து கொள்வதே நினைவு வந்தது. எங்கள் நெல்லை செய்தியும் இதற்க்கு ஒத்திருப்பது உண்டு சில வேளைகளின்,தன் குடும்பத்தில் இரண்டு கொலை விழுந்தது என்றால் அவன் குடும்பத்தில் குறைந்தது நாலாவது விழ வேண்டும் என அரிவாளோடு வாழ்பவர்களை பத்திரிக்கை மூலம் படித்துள்ளேன். எல்லாம் மனித மனம் நாம் பழக்க படுத்திகொள்வதே!.




எனது வாழ்க்கையில் இருந்து நான் கற்றது நல்ல கனவு(தூக்கத்தில் அல்ல) காண வேண்டும் என்பதே, நம்மை பற்றி மட்டும் அல்லாது மற்றவர்களை பற்றியும் அவ்வாறே. வெறும் கனவு கைக்கூட எள்ளளவும் சாத்தியமல்ல என்று அறிந்தும் கனவு கண்டேன்,ஆனால் கனவுப்படியே நடந்தது. குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்பதற்க்காகவே நானும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். ‘கல்லூரி ஆசிரியை’ என்ற கல்லூரி நாட்கள் கனவு ஒரு புறம் இருந்து கொண்டே தான் இருந்தது அப்போழுது வெறும் பட்டதாரி!. ஒரு நாள் என் கணவர் என்னிடம் வினைவினார் கல்லூரியில் முழு நேர பாடத்திட்டத்தில் சேர்த்துவிட்டால் படிக்கின்றாயா என. என்னவர் கேலி செய்கின்றார் எனவே எண்ணினேன். அப்போழுது பட்டபடிப்பு முடித்து சரியாக 10 வருடம். ஆனால் இப்போழுது நான் ஒரு இளம் ஆராய்ச்சியாளர்!


வாடகை வீட்டில் வாழ முடிவதில்லை வசிக்கவே முடியும் என வந்த போது நானும் எங்களது மகன்களும் பொழுது போக்காக துண்டு தாளுகளில் வீட்டின் வரைபடம் வரைந்து எங்கள் கனவே வளர்த்தோம். பின்பு கனவு நனவாகி சொந்த வீட்டிலும் குடி புகுந்தோம்.




தமிழ் படங்களின் தாக்கத்தால் கணவர் என்றாலே ஒரு பயம் இருந்தது. எங்கள் கேரளாவில் கல்லூரியிலும் மற்றும் எங்களுடன் படிக்கும், சந்திக்கும் ஆண் நபர்கள்(நண்பர்கள்) சிவப்பாக, தாடி வைத்து,பார்க்க மென்மையாக காட்சி தருவர். நாங்கள் கண்ட மலையாள திரைப்பட ஹீரோக்களும் மோகன் லால்,மம்மூட்டி போன்றவர்களே.திருமணம் என வந்தபோது பச்ச தமிழன்தான் வேண்டும் என விரும்பிய போது ஒரு பயம் உள் மனதில் இல்லாதில்லை.ஆனாலும் நல்ல கனவே கண்டேன்.நான் கண்ட கனவு போலவே ஆருயிர் தோழராகவே எனது கணவர் கிடைத்தார்.




இப்போழுது சில மகன்களின் அம்மாக்களிடம் கதைக்கும் வாய்ப்பும் கிடைக்கும் போது நான் கண்டது அவர்களின் கனவே மருமகள் வருவாள்,வந்தவுடன் இவர்களிடம் சண்டையிடுவாள், மகனை பிரித்து விடுவாள்,அதற்க்கு முன்பு அவளை தனியாக குடிபுகுத்த வேண்டும் அவளிடம் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.ஒரு முன் கருதல் தேவையே,அதற்க்கு என எதிர்மறையான கனவுகள் அல்ல தீர்வு,ஏன் அம்மாக்கள் மருமக்களை பற்றி நல்ல கனவு காண கூடாது?நான் எனது மருமகளை பற்றியும் அழகான கனவு காண ஆரம்பித்துவிட்டேன்.(என் மகன்கள் படிப்பது 7,3 வகுப்புக்களில்.)சிறுகுறிப்பு, என்னவரிடன் என் கனவை பற்றி பகிர்ந்து கொண்டிருந்தேன், பாபா- அத்தான் "என் மருமகள் நீல கண்ணுடன், வேற்று மொழி பெண்ணாக இருந்தால் எப்படி இருக்கும்" என  அவரிடம் கேட்ட போது, அவர் சொல்கின்றார் நல்லது தான் நீங்க இரண்டு பேரும் சண்டை போடது எங்களுக்கு புரியாது இருக்கும் என, அவருடைய கனவை பாத்தீங்களா?

22 Aug 2010

பெண்கள் கல்லூரியே இது நியாயமா?

பெண்கள் கல்லூரி கடந்தே எங்களது வீட்டிற்க்கு செல்ல வேண்டியுள்ளது. சமீபமாக ஒரு ஏழை மனிதர் கல்லூரி முன்பாக அழகிய சிவப்பு நிற ஊட்டி  ரோஸ், மல்லிகை போன்ற மலர்கள்  வித்து கொண்டிருந்தார். சுனாமியில் பாதித்த பகுதி போன்றே காட்சியளிக்கும் பூச்சற்ற கல்லூரியின் தோற்றம்  பூக்களால் புதுப்பொலிவுடன் அழகிய இளம் மங்கை போல் காட்சி அளித்து. 

சமீபத்தில்  அவ்வழியாக சென்றபோது பூக்காரரை காணவில்லை, அக்கல்லூரியில்  படிக்கும் தோழி வழியாக அறியபட்ட செய்தி 'பெரும் துயர்' போன்றே எனக்கு தோன்றியது. மாணவிகள் பூ வாங்குவதற்க்காய் கூட்டமாக நிற்ப்பதால் பூ விற்ப்பவரை கல்லூரியின் முன்பு நிற்க்க கூடாது என தடுத்து விட்டார்களாம்.

பூ விற்ப்பவர் ஒரு பரம ஏழை.ஒரு ஏழை குடும்பம் பிழைத்திருக்கும். அவருடைய குழந்தைகளும் மூன்று வேளை உணவு அருந்தி பள்ளி செல்லும் வாய்ப்பை பெற்றிருப்பாகள்.
ஏன், கல்லூரி மாணவிகள் கணிணி மைய்யத்தில், பேருந்து நிலையத்தில், பேருந்தில், கூட்டம் கூடி நிற்ப்பது மட்டும் அல்லாது  பல விதத்தில்  அராஜகம் பண்ணி கொண்டு தான் இருக்கின்றனர், கல்லூரி நிறுவாகத்தால் இதை  தடுக்க முடியுமா?. நான் கல்லுரிக்கு பயணிக்கும் பேருந்தில் இம்மாண்விகளில் சிலர்  இரண்டு மூன்று பேர் வந்து தன் தோழிகள் பத்து பேருக்காவது தனது புத்தகம் ,புத்தக பை மூலம்  சீட் பிடித்து விடுவார்கள். வயதானவர்கள் வந்தால்  கூட இருக்கை கொடுப்பது கிடையாது.   சில வேளைகளில் சண்டையிட்டு இருக்கை-seat  பிடிக்கும் சூழலுக்கு தள்ள பட்டுள்ளேன்.

சமீப காலமாக இரக்கம், அன்பு எல்லாமே ஞாயிருகளில்,, சர்ச்சுகளில் கேட்க்கும் வெறும் நற்செய்தியாக மட்டுமே கிருஸ்தவர்கள் மத்தியில்  மாறி வருகின்றது போல் தெரிகின்றது. சிறப்பாக ஆசிரிய பெருமக்களுக்கென சில மன- தொற்று நோய்கள் சமீப காலமாக வளர்ந்து வருகின்றது.

சமூக அக்கரை,மனித நேயம் என்பதை விட ஒழுக்கம்,கட்டுபாடு என பெயரில் மற்றவர்களை துண்புறுத்துகின்றனர்.அவர்கள் கண்ணில் எகத்தாளம், அகங்காரம் களியாடுவதை பல இடங்களில் உணரலாம்.

இவர்களிடம் கல்வி கற்று வரும்  மாணவர்களும்  இம்மனபாதிப்பினால் தான் ராகிங் போன்ற ஈன செயலில் ஈடுபடும் சூழலுக்கு தள்ளபடுகின்றனர்.

மாணவிகள் கல்லூரி  பருவத்தில் தான் பூ போன்றவற்றை வளமாக வாங்கி பயண்படுத்தும்  நேரம் மற்றும் ஆசை உள்ளது. ஆசிரியைகளின் மனதை விசாலபடுத்தாது மாணவிகள் நல்லதொரு கல்லூரி வாழ்க்கையை காணுவது கடினமே.

இப்போழுதும் என் கல்லூரி நாட்களை நினைத்து பார்ப்பது உண்டு. எங்கள் கல்லூரி விடுதிக்கு பூக்காரக்கா வராவிட்டால் அற்றைய தினமே வெறுமையாய் தோன்றுபவர்களும்  உண்டு.
 இப்போழுது பூக்கள் தோட்டதில் இருந்தாலும் கூட பறித்து தொடுக்க நேரம் இல்லை. அத்தான் மதுரை சென்றால் மல்லிகை பூ வாங்கி வருவார். சில வேளைகளில் வேலை பழு மத்தியில் பூ வைப்பதற்கே மறந்து விடும்.
கல்லூரி நாட்களில் நாங்கள் தோழிகள் ஒரு பந்து பூ என வாங்கி பங்கிட்டு வைத்த காலங்கள் மனதில் பூக்களாய் பூக்கின்றது.

15 Aug 2010

நானும் பிச்சைகாரர்களும்

என்னுடைய ஊரில் ‘மினி மார்கெட்’ என அழைக்க படும் ஓர் பகுதி உள்ளது. முக்கிய சாலையோரம், பேருந்து நிலையத்தின் மிக அருகாமையில்,  மற்றும் எங்கள் ஊர் காவல் நிலையத்திற்க்கு மிக அருகில் அமைந்த ஒரு  பகுதியாகும்.  தமிழகத்திலுள்ள குடிசைப்பகுதி போன்றுள்ள பகுதி. சிறுவயதில் என்னுடைய கவனத்தை ஈர்த்த ஓர் பகுதி.  தினமும் நாங்கள் பள்ளி செல்லும் போது இந்த பகுதியை கடந்து செல்ல வேண்டியிருந்தது.  அங்குள்ள மக்கள் எல்லோரும் பிச்சைகாரர்களாகவும் இருப்பது இல்லை.  சிலர் வீட்டு வேலைக்கு செல்பவர்கள்,வீட்டு கட்டுமான பணிக்கு செல்பவர்கள், கஞ்சா போன்ற பொருட்களை (சிறு தோதில்)கடத்துபவர்கள், வட்டிக்கு கொடுப்பவர்கள், பாலியல் தொழில் புரிபவர்கள் என பல தர மக்கள் இருந்தனர். இவர்கள் உரிய உடல் நலம் உள்ளோர் வேலைக்கு செல்லின், வழியற்றவர்கள் பிச்சை எடுக்க வருவர்.அவ்வாறு வரும் வேளைகளில்  எங்களுடைய  கடைகளுக்கு வெள்ளி கிழமைகளில் மட்டும்.குறைந்தது 25 காசுக்கு குறையாது கொடுக்க வேண்டும். இதிலும் குறைவாக 10-20 காசு கொடுத்தால் நம்மளிடமே தூக்கி எறிந்து விடுவார்கள்.இதற்க்கென ஆடையலங்காரம், ஒரு விதமான பாத்திரம், பை வைத்திருப்பார்கள். இந்த பிச்சகாரர்களில் ஒருவர் கூட மலையாளியாக பார்த்தது இல்லை .காரணம் பிச்சைக்கு என தொழிலை கையிலெடுக்கும் முன் தமிழ் பிச்சைக்காரன் அல்லது தமிழ் பிச்சைகாரியை மணம் முடித்து அக்மார்க்கு தமிழராக மாறிவிடுவர். இதனால் வகுப்புகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்களாகட்டும், பேராசிரியர்கள் ஆகட்டும் மாணவர்களுக்கு பிச்சைகாரர்களை பற்றி கூறும் போது பாண்டிகள் கண்டிடுண்டோ?அவரா தெண்டிகள் என விளக்கவுரை நடத்துவர்.(மலையாளம் வழி கல்வி கற்றதால் நேர் அனுபவம்)




இவர்களிடம் ரசிக்கும் படியான விஷயம் வாழ்க்கையை அணுவணுவாக ரசிச்சு வாழ்வதாக தோன்றும்.  நம் போன்ற மக்களுக்கு அவை அருவருப்பாகவும்(.அங்காடி தெருபடத்தில் காலை மிதித்து விளையாடுவதை நினைவுகூறவும்). பகல் முழுக்க அழுக்கு பிடித்த ஆடை, பரட்டை தலையுடன் அலையும் மக்கள் மாலை 4 மணிக்கு ஒரு கிலோ அரிசி வாங்கி சென்று கஞ்சியாக குடிப்பார்கள்.(கஞ்சி குடிப்பதை எப்படி அறிந்தேன் என கேட்க்கின்றீர்களோ.எங்க ஊரில் 6 மாதம் மழையாகதான் இருக்கும்,வாங்கும் பொருட்களை வைத்துள்ள அனுமானமே) 6 -7 மணிக்கு குளித்து,சுத்தமான ஆடை அலங்காரத்துடன் சினிமா தியேட்டருக்கு செல்வர். ஒரு குடும்பம் என அல்லாது 10 -15 குடும்பம் சேர்ந்து குட்டி குழந்தைகளுடன் குதூகுலமாக ஓடி செல்வார்கள் டிக்கெட் வாங்க. படம் முடிந்து செல்லும் போது ஆண்கள் குடித்து தள்ளாடி சிலர் கெட்டவார்த்தைகளுடன் சண்டையிட்டு செல்வர்,சில பெண்களும் தான்!


வாரத்துக்கு எல்லா நாட்களும் தியேட்டருக்கு வருவார்கள்.இந்த பகுதியில் ஒரு தொழுநோயால் ஒரு கை இல்லாதவனுக்கு இரண்டு மனைவி இருந்தனர். அவன் பிச்சை எடுக்கும் பணத்தை வட்டிக்கு கொடுப்பதாக கேள்விபட்டுள்ளேன்.அவனுடைய மனைவிகளை சாட்டையை வைத்து அடிப்பானாம். இரண்டாவது மனைவி அவனுடைய மகளுக்கு ஒத்த வயதில் இருந்தாள்.


அதே பகுதியில் தேனம்மா என்ற பிச்சைகாரி எனது பாட்டியை தேடி வந்து பேசி கொண்டிருப்பார். எனது அம்மா பாட்டியை திட்டுவார்கள் ஏன் பிச்சைகாரியிடம் மணிக்கணக்காக பேசி கொண்டிருக்கின்றீர்கள் என. அம்மாவுக்கு தேன்ம்மாவை பிடிக்காது ஏன் என்றால் எப்போழுதும் தன் பிச்சைக்கார கணவருக்கு பேன் பார்த்து கொண்டு இருப்பதால் தான்! ஆனால் பாட்டி தேனம்மாளை பற்றி கூறும் போது அவளுடைய விதி அவளை தெருவுக்கு கொண்டு வந்து விட்டது என கவலைபடுவார். எனது பாட்டி தேயிலை தோட்டதில் பணியாளராக வேலைபார்த்து கொண்டுருந்தபோது தேனம்மா அந்த எஸ்டேடில் புதிதாக மண்ம் முடித்து வந்துள்ளார். அவள் அணிந்த நகைகளை பெண்கள் அதிசயமாக பார்க்கும் அளவுக்கு இருந்துள்ளது. மூக்குத்தி, ஒட்டியாணம்,  வளையல்கள், என பார்க்கும் பெண்களுக்கு ஆச்சரியமாகவே இருந்துள்ளார். பார்ப்போரை பரிவுடன் பேசுவது, நலம் விசாரிப்பது என எல்லாருடனும் அன்பாக பழகி இருந்துள்ளார். இரண்டு குழந்தைகள் என ஆகிவிட வீட்டு வேலைக்கு உதவியாய் வந்த தன் தங்கை, பின்பு கணவருக்கு அன்பு மனைவி ஆகிவிட்டாள் என அறிந்ததும் புத்தி தடுமாறி வீட்டை விட்டு வெளியேறிய தேனம்மாவுக்கு அடைக்கலம் கொடுத்தது மினி மார்க்கெட் மட்டுமல்ல மினி மார்க்கெட்டில் குடியிருந்த பிச்சைகாரரும் தான். பிச்சைகார கணவர் இறந்த  பின்பு ஒரு மலையாளி வீட்டில் பணியாளராக இருக்கும் போது, ஆற்றில் துணிதுவைக்க சென்ற இடத்தில் ஆற்றிலே இறந்து போனார்.அவருடைய குழந்தைகளும் பிச்சைகாரர்களாய் மாறியது.


சரணாலயத்தால் மீட்க்கபட்ட சிறார்.
எனக்கும் ஒரு பிச்சைக்கார சிறுவன் நண்பன் ஆகினான். நான் செல்லும் ஆலய வாசலில் பிச்சை எடுத்து கொண்டிருப்பான். அவனுடைய அக்கா அவனுக்கு பிச்சை எடுக்க பயிற்ச்சி கொடுப்பாள். சத்தமா கேளுடா என கிள்ளிவிடுவாள்.அவன், மேடம் பிச்சை தாங்க என கருணைகுரலில் பிச்சை கேட்பான்.அவனிடம் சில தருணங்களில் பேசுவது உண்டு. ஒரு முறை அவனுடைய  அக்கா மாரியம்மா எங்கே,  என விசாரித்த போது வயசுக்கு வந்ததால் பிச்சை எடுக்க வருவதில்லை என கூறினான். அவன் இப்போழுது தன் தங்கைக்கு, தம்பிகளுக்கு பயிற்ச்சி கொடுத்து கொண்டிருந்தான்.அவனுடைய தாய் மடியில் இப்போழுதும் புதிதாக பிறந்த குழந்தை விளையாடி கொண்டிருந்தது. ஒரு முறை திருநெல்வேலியில் உள்ள குழந்தை சரணாயலத்திற்க்கு சென்ற போது அவனை அங்கு பார்த்தேன். மேடம் என்னை நினைவு உள்ளதா நான் படிச்சு பெளேன் ஓட்ட போறேன் என கூறினான். அவனிடம் உரையாடிய போது கேரளாவில் பிச்சை எடுக்கும் போது எவ்வகையான மொழி பயண்படுத்த வேண்டும்,எப்படி பாட்டு பாடி பிச்சை எடுக்க வேண்டும்  என சில டிப்சு தந்து கொண்டிருந்தான். அங்கு இவனை போன்ற குழந்தைகளை கவனிக்கும் ஊழியர், “நல்லா பேசுவான் வேலை செய்யதான் உடம்பு வளையாது” என சொல்லிகொண்டிருந்தார். பின்பு அவன் தங்கி படிக்கும் பள்ளிக்கு சென்ற போது ரொம்பவே மன அளவில் குழப்பத்தில் இருந்தான்.அப்போழுது அவனுடைய மனநிலை படிப்பதிலும் தன் சகோதரன், பெற்றோரிடம் சேரும்  நோக்கில் இருந்தான். பிச்சைகார குழந்தைகளுக்கு ஒரு நிலையான வாழ்க்கை மிகவும் கஷ்டமானது என அறியபட்டேன்.குறுகிய நாட்களில் பள்ளியை விட்டு தப்பி சென்றதாக கேள்விபட்டேன். இந்த மாதிரியான குழந்தைகள் நமது இரக்கத்தை விட நாம் காட்டும் வஞ்சனை அற்ற அன்பை, அவர்கள் உணர்வுகளை மதிக்கும் பண்பை  பெரிதும் விரும்புகின்றனர்.அவர்கள் விரும்பும் அங்கிகாரம் நாம் கொடுக்க துணிவது கிடையாது.


இதை போன்ற 10 பிச்சைகார குழந்தைகளுக்கு பாதுகாவலர்களை(local guardian) உருவாக்க வேண்டும் என நோக்கில் சில வசதிபடைத்தவர்கள், பேராசிரியர்கள்,பேராசியைகளை நெருங்கினேன். இதிலும் சிறப்பாக நான் சார்ந்த கிருஸ்தவர்களையும் அணுகினேன். சிலர் அநியாயத்திற்க்கு பரிதாப பட்டார்கள் . ஆனால் யாரும் ஆக்க பூர்வமாக செயல் ஆற்ற முன் வரவில்லை. சிலருடைய நாவிலுள்ள இரக்கம் மனதில் இல்லை என தெரிந்த போது நொறுங்கி போனது என் மனம்.

1 Aug 2010

'South Oxford ' என அல்வா கொடுக்கும் திருநெல்வேலி பள்ளிகள்.

  தமிழகம் முழுக்க தனியார் பள்ளிகள்State Board, Matriculation,Central board ,International sylabus  என பல பெயர்களில் கால கரணபட்ட கல்வி திட்டத்தையே அளிக்கின்றது.குழந்தைகள் மன அளவில் முன்னேரியுள்ளனர். அவர்களுக்கு தகுந்த பாட திட்டம் நடைமுறையில் இல்லாதது பெரும் குறையே.  இதற்க்கு காரணம் மாற்று கருத்தற்ற பள்ளி சூழலே.  பள்ளி தாளாளர்க்கு பள்ளி முதல்வர் அடிமை என்றால்,  பள்ளி ஆசிரியர்கள்  முதல்வருக்கு அடிமை,  மாணவர்கள் ஆசிரியர்களுக்கும்!


தொடர்பியல் முறையில் எவ்வளவோ முன்னேற்றங்கள் வந்துள்ளது, பள்ளிகள்  பின் பற்றும் விதம்  பழமையாகவே உள்ளது.ஆசிரியர்கள் இந்த சீனகாரர்கள் மாதிரி. நன்மையை விட தீமைய்  பற்றி  தான் கணக்கிடுவர் நம் ஆசிரியர்கள் .மீடியா மோசம் மீடியா மாணவர்களை சீரளிக்கின்றது என எவ்வளவு நாட்களுக்களுக்கு தான் குப்பை கொட்டுவாங்க என்று தெரியவில்லை.காணொளி,படங்கள் என பல யுக்திகளை கைய்யாளலாம்.சிறப்பாக தமிழ், ஆங்கிலம்,ஹிந்தி போன்ற  மொழி பாடங்களுக்காவது.
பொதுவாக ஆசிரியர்கள் அவர்களை புதுமை(update)படுத்துவது கிடையாது. அவுங்க TTC ,BEd படித்த காலத்தில் தான் வாழ்வார்கள்.
பேருந்தில் பயணிக்கும் போது, மற்றும் பொது இடங்களில்  ஆசிரியர்களை காணும் போது அவதானிக்க முடிந்தது; அவர்களுக்கு ஒரு சமரசமுள்ள மனம் கிடையாது, தன்னலம்,வரட்டு கவரவம் என மூழ்கி கிடக்கின்றனர்.  பார்வையிலே ஒரு எகத்தாளம்! இவர்களால் எவ்வாறு ஒரு தலைமுறையே வழி நடத்த முடியும். இப்போழுது பரவாலாக காணும் அபாயம் ,ஆசிரியர்களும் தரம், ஜாதி என மாணவர்களை பிரித்து பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
 பள்ளி தலைமையும்  ஆசிரியர்களின் ஆளுமையைய் மதிப்பதும் கிடையாது, அவர்கள் ஒரு பொருள் மட்டுமே.




இன்று தோட்ட வேலை செய்யும் நபர் தின கூலியாக   4 முதல் 5 மணி நேரம் வேலைக்கு 150  முதல் 200 ரூபாய் வாங்குகின்றார். அதே போல் நமது கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டுமென்றால்  ஒரு நாட்களுக்கு 350 ரூபாய் கொடுக்காது ஆள் கிடைப்பது அரிது ஆனால் ஆசிரியர்கள் 2000-4000 ரூபாய்க்கு(பிரதி மாதம் )   கிடைக்க கூடும்.  தகுந்த ஊதியத்தை கூட்டு முயற்ச்சியாக வாங்க  வழி வகுப்பது கிடையாது, உதாரணத்திற்க்கு  துப்புறவு சங்கம் தெருவாரியாக வேலையாட்களை பிரித்து வைத்துள்ளது. ஆகயால் நமக்கு அடிமாட்டு வேலைக்கு ஆள் கிடைப்பது  சாத்தியமற்றது.  ஆனால் படித்தவர்களுக்கு ஒற்றுமை என ஒன்றில்லை.  போதாதற்க்கு இவர்கள் மத்தியில்  கழுத்தறுக்கும் போட்டி மட்டுமே நிலவுகின்றது. . சும்மா,  கிடைத்த சம்பளத்திற்க்கு வேலைக்கு சேருவது, ஆனால் கற்ப்பிப்பது மட்டும் அறைகுறையாக!  இந்த எல்லா பாதிப்பும் குழந்தைகள் படிப்பிலும்,வாழ்விலும் தாக்கத்தை ஏற்ப்படுத்துகின்றது.

மதுரை,கோயம்பத்தூர் பள்ளி தரத்தை விட மிகவும் கீழ் மட்டமாகவே நெல்லை மாவட்டம் உள்ளது.பள்ளி குழந்தைகளுக்கு சரியாக வாசிக்க கூட கற்று கொடுப்ப்து இல்லை. தனியார் பள்ளியில்  3 ம் வகுப்பு  குழந்தைக்கு வருடத்திற்க்கு   20 ஆயிரத்திற்க்கும் மேல் செலவாகுகின்றது,ஆகினும் tution எனும் தனி பாடத்திற்க்கு அனுப்பினாலே சிறப்பாக படிக்க இயல்கின்றது.
தனியார் பள்ளியில் பெற்றோர் கூட்டம்(parents meeting) என ஒன்று கிடையாது. ஒருவேளை  இருப்பினும் ஆங்கிலத்தில் பேசி ஒரு  பிரம்மையை உண்டாக்க  முயல்வார்களை தவிர ஆக்க பூர்வமான கருத்து பரிமாற்றம் நடப்பதாக புலன்ப்படவில்லை. சில அம்மாக்கள் இவ்வகையான கூட்டத்தை தங்கள் பிள்ளைகள் குறையை கூறும் ஒரு வழக்காடும் மன்றம் (கோர்ட்) மாதிரி எடுத்து கொள்வார்கள்.தொலைகாட்சி பார்ப்பதாக குறைபடுவர்.குறைகள் நீண்டுகொண்டே போகும்.


தேற்வு தாள் கொடுக்கும் படலம் என ஒன்று உண்டு. சில வீடுகளில் குடும்பத்துடன் வந்திடுவாங்க. அன்று குழந்தை தூக்கிலிடும் கைதி போல் தான். கை கட்டி கூனி குறுகி நிற்க்கும்,ஆசிரியை குற்ற மொழியே ஆரம்பிப்பார் 'தங்கிலீஷ்' என்ற மொழியில்! ஒரு பக்கம் அப்பா  ஆமா மிஸ் அடிங்க, படிக்கவே மாட்டுங்குதா, உடனே அம்மா,குழந்தை I.A.S பரிட்சையில் கோட்டை விட்டது போல் அழுதுடுவாங்க.



நிஜம் என்ன நிறைய வீடுகளில் அம்மா வானொலியில் விளம்பரம் வருவது போல் படி, படி என்று ஒரு சத்தம்  மட்டும் கொடுத்து விட்டு தொலைகாட்சி தொடர் கதைகளில் முழுகி விடிகின்றனர் என்பதே நிஜம்.



சமீப காலமாக சில பெயர்களில், மிக பெரும் அளவில் விளம்பரம் கொடுத்து வெறும் 10-15 சென்டு இடங்களில்  சில பள்ளிகளை ஆரம்பித்தனர் .அரசியல் அமைப்பு சட்ட படி பள்ளிகளுக்கு என சில அளவுகள் நிர்ணயித்துள்ளனர், மேல் நிலை பள்ளி என்றால் 3 முதல் 5 ஏக்கர் இடம்,உயர் மேல் நிலை பள்ளி என்றால் 5 முதல் 8 ஏக்கர் இடம். இவை எல்லாம் ஏட்டு சுரக்காய் என்று மட்டுமே எனில் சட்டங்களால் யார் பயண் அடைவர்.

 மேலும் கணிணி மயமாக்கபட்ட,குளிருட்ட பட்ட என பல வசதிகளை கூறி பள்ளிகள் ஆரம்பிக்கின்றனர். அவ்வாறாக ஆரம்பிக்க பட்ட பள்ளியே நெல்லை பப்ளிக் பள்ளி. வகுப்பு அறைகள்  குறுகியதும் கழிப்பிடங்கள் சந்திலும் பொந்திலுமாக அமைத்திருந்தனர்.  smart room  கற்ப்பித்தல் எனவும்   அறிமுக படுத்தியிருந்தனர்.ஒரே வருடத்தில்  மூடு விழா நடத்தி விட்டார்கள்.இதில் இந்த பணக்கார பெற்றோரை நினைத்தால் தான் பரிதாபமாக உள்ளது.வீட்டில் தான் பாதுகாப்பு,அந்தஸ்த்து என கூறி வீட்டு வளாகத்தினுள்ளில் வளர்ப்பார்கள். பள்ளியாவது இயற்க்கை வளம் உள்ளதாக பார்த்து சேர்க்கலாம் இல்லையா?
இப்படி திருநெல்வேலி பள்ளி படிப்பு பாதாளத்தை நோக்கி போய் கொண்டிருக்கின்றது. அடைமொழி south oxford யாவது தூக்கி எறிஞ்சுட்டு  அல்வா கொடுப்பதை நிறுத்தினால் யாவருக்கும் நல்லது.