23 Aug 2010

நல்ல கற்பனைகளும் கனவுகளும்





பதில் இடுகை வழியாக ஒரு பதிவரின் வலைப்பதிவை வாசிக்க பெற்றேன். 2035ல் ராஜபக்சே, பிராபகரன், சீமான் போன்றோரின் நிலையை பற்றி கற்பனையில் ஒரு பதிவு எழுதியிருந்தார். சில பகுதி ரொம்ப வன்மம் கொண்டதாக இருந்தது. இருப்பினும் ஈழப்போர் விடுத்த கடுமையான மனபோராட்டத்தை எண்ணியபோது அவர் எதிர் கொண்ட போரின் தாக்கத்தை வேறுவிதமாக கொட்டியுள்ளார் என எண்ணிகொண்டேன். அந்த பதிவிற்க்கு பதில் இடுகைதான் என்னை அதிற்ச்சி பெற செய்தது.  மறுஇடுகையில் ஒருவர் எழுதியுள்ளார் தென்தமிழகத்தில் பூமி அதிற்வு வந்து 3 லட்சம் பேர் மாண்டு போவார்ளாம் 2035! என்ன ஒரு கற்பனை வளம் என பாருங்கள் (26 -வருட ஈழ இன படுகொலையில் மாண்டுபோன மக்கள் 1 லட்சம் பேர்! )நம் மக்கள்,எதிற்மறையான கனவுகள் கற்பனைகளை விட நல்ல கனவுகள் காணலாம்.  யஹூத மக்கள் தங்கள் தேசம் ஒரு நாள் கிடைக்குமென தீர்க்கமாக கடவுளின் பெயரால் நம்பினர், எடுத்து காட்டாக ‘ஷிண்டேஸ் லிச்ட்டு’ ஸ்டிவன் ஸ்பீல் பெர்கின் திரைபடத்தில் அவர்களுடைய நிலையை சரியாக சித்தரித்திருப்பார்.  http://www.newsandentertainment.com/zMschindler.html.  இவ்வளவுத்துக்கும் தன் உடல் பலத்தைவிட மன பலத்தையே நம்பினர், அதே போல் தங்களுக்கு என ஒரு தேசத்தையும் பெற்று விட்டனர். சமீபத்தில் எனது பேருந்து தோழியிடன் ஈழ செய்தியை பற்றி கதைத்து கொண்டிருந்தபோது இவ்வாறே கூறினார், வாழ்க்கை ஒரு சுழற்சி ஆகையால் தோல்வியும், ஜெயவும் நிரந்தரமல்லை என;  இன்று தோற்றவன் நாளை ஜெயிப்பான் என நம்பிக்கை கொண்டோம்.




ஒரு வயதான பாட்டியும் நானும் நேரம் கொல்வதற்க்காய் கதைத்துகொண்டிருப்பது உண்டு. பாட்டி முழு பொழுதும் தொலைகாட்சி பெட்டி செய்தி பார்ப்பவர். பாட்டி வழி செய்திகளின் நேரடி ஒளிபரப்பு  எனக்கும் வந்தடையும். எனக்கும் க்ரயம்(crime) செய்தி மேல் நாட்டம் இருப்பதால் ஆற்வமுடன் கேட்பேன். வர வர பாட்டி க்ரயம் செய்தி மட்டுமே தரவேண்டும் என்ற பிடிவாதத்துடன் மகா மோசமான கொலை, கொள்ளை,தகாத உறவு,கற்பழிப்பு என எனக்கென்றே தணிக்கை செய்தது, செய்தி தர ஆரப்பித்துவிட்டார்.




சில வேளைகளில் இப்பாட்டியுடன் எங்கள் பகுதியில் உள்ள குன்றை நோக்கி நடைபயிற்ச்சி செல்வதுண்டு.  ஒரு முறை பாட்டி தன் கற்ப்பனை கதையை கட்டவழ்த்து விடுகிறார், பூமி மட்டும் குலுங்கிச்சு, இந்த பாறைகள் உருண்டு வந்து இங்கு இருக்கும் வீடுகள் எல்லாம் உடைந்து சுக்கு நூறாக்கி விடும்.(முதல் வீடு எங்களுடையது?),அதும் தீர்க்கமாக செல்கின்றார் 2012 ல் பெரியொரு அழிவு திருநெல்வேலிக்கு உள்ளதாம். அதிலும் பாட்டிக்கொரு மகிழ்ச்சி சொந்த வீடு வைத்துருப்பவர்களும் தெருவுக்கு வந்திடுவாங்களாம் அப்போழுது வாடகை வீடு, சொந்த வீடு என எல்லோரும் ஒரே மாதிரி ஆகிடுவாங்களாம். பாட்டியின் கம்னியூசம் இப்படியும் போகுதே என எண்ணி நொந்து கொண்டு இருந்துவிட்டேன்.




சமீபத்தில் குடிசை மாற்று வாரியம் 302 வீடு எங்கள் பகுதியில் கட்டியுள்ளது. பேருந்து ,கடைவசதிகள் பெருகும் என நான் நினைத்து கொண்டேன். மேலும் எங்கள் ஏரியா தலைவர் அசைவ சாப்பாட்டு சாப்பிடுவது இல்லை என்பதால் அசைவ கடைகள்(ஆடு,கோழி,மீன்) வருவதற்க்கும் தடை விதித்துள்ளார் . அவருடைய அதிகார மையம் செயல் இழக்கும் என்பதில் தான் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் பாட்டியின் கூற்று படி தெருவின் அமைதி பறிபோயிடும்,மேலும் பூமி தண்ணீர் குறைந்து விடுமாம்.சுகாதாரம் கெட்டுவிடுமாம்.






இப்போழுது ஒரு தண்ணீர் தொட்டி கட்டி கொண்டுருக்கின்றனர். பாட்டி என்னை அழைத்து சொல்கின்றார், டாங்கு கட்ட நல்ல ஆழமாக தோண்டுகின்றார்கள். ஆஹா பாட்டியும் ஆக்க பூர்வ்மான சிந்தனை ஓட்டத்திற்க்கு வந்து விட்டார்களா என நிமிர்ந்து பார்த்தால், அடுத்த வார்தை தான் தூக்கி வாரி போட்டது; பயன்படுத்தும் கம்பி சரியில்லையாம்,கட்டி முடிக்கும் போது டாங்கு தலை குப்புற விழுமாம்,விழுவது மட்டுமல்ல எதிர்புறத்திலுள்ள வீட்டை அடித்து கொண்டு போய் விடுமாம். இப்போழுது பாட்டி என்னை பார்ப்பதற்க்குள்ளாகவே ஒளிந்துவிடுவேன். இதும் ஒரு போபியாவே.




சிறு வகுப்பில் படிக்கும் போது( 8-12 வயதுக்குள்)சண்டையிட்டு கொண்டால் உன் கண்ணை காக்கா கொத்தும், என வழக்கடித்து கொள்வதே நினைவு வந்தது. எங்கள் நெல்லை செய்தியும் இதற்க்கு ஒத்திருப்பது உண்டு சில வேளைகளின்,தன் குடும்பத்தில் இரண்டு கொலை விழுந்தது என்றால் அவன் குடும்பத்தில் குறைந்தது நாலாவது விழ வேண்டும் என அரிவாளோடு வாழ்பவர்களை பத்திரிக்கை மூலம் படித்துள்ளேன். எல்லாம் மனித மனம் நாம் பழக்க படுத்திகொள்வதே!.




எனது வாழ்க்கையில் இருந்து நான் கற்றது நல்ல கனவு(தூக்கத்தில் அல்ல) காண வேண்டும் என்பதே, நம்மை பற்றி மட்டும் அல்லாது மற்றவர்களை பற்றியும் அவ்வாறே. வெறும் கனவு கைக்கூட எள்ளளவும் சாத்தியமல்ல என்று அறிந்தும் கனவு கண்டேன்,ஆனால் கனவுப்படியே நடந்தது. குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்பதற்க்காகவே நானும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். ‘கல்லூரி ஆசிரியை’ என்ற கல்லூரி நாட்கள் கனவு ஒரு புறம் இருந்து கொண்டே தான் இருந்தது அப்போழுது வெறும் பட்டதாரி!. ஒரு நாள் என் கணவர் என்னிடம் வினைவினார் கல்லூரியில் முழு நேர பாடத்திட்டத்தில் சேர்த்துவிட்டால் படிக்கின்றாயா என. என்னவர் கேலி செய்கின்றார் எனவே எண்ணினேன். அப்போழுது பட்டபடிப்பு முடித்து சரியாக 10 வருடம். ஆனால் இப்போழுது நான் ஒரு இளம் ஆராய்ச்சியாளர்!


வாடகை வீட்டில் வாழ முடிவதில்லை வசிக்கவே முடியும் என வந்த போது நானும் எங்களது மகன்களும் பொழுது போக்காக துண்டு தாளுகளில் வீட்டின் வரைபடம் வரைந்து எங்கள் கனவே வளர்த்தோம். பின்பு கனவு நனவாகி சொந்த வீட்டிலும் குடி புகுந்தோம்.




தமிழ் படங்களின் தாக்கத்தால் கணவர் என்றாலே ஒரு பயம் இருந்தது. எங்கள் கேரளாவில் கல்லூரியிலும் மற்றும் எங்களுடன் படிக்கும், சந்திக்கும் ஆண் நபர்கள்(நண்பர்கள்) சிவப்பாக, தாடி வைத்து,பார்க்க மென்மையாக காட்சி தருவர். நாங்கள் கண்ட மலையாள திரைப்பட ஹீரோக்களும் மோகன் லால்,மம்மூட்டி போன்றவர்களே.திருமணம் என வந்தபோது பச்ச தமிழன்தான் வேண்டும் என விரும்பிய போது ஒரு பயம் உள் மனதில் இல்லாதில்லை.ஆனாலும் நல்ல கனவே கண்டேன்.நான் கண்ட கனவு போலவே ஆருயிர் தோழராகவே எனது கணவர் கிடைத்தார்.




இப்போழுது சில மகன்களின் அம்மாக்களிடம் கதைக்கும் வாய்ப்பும் கிடைக்கும் போது நான் கண்டது அவர்களின் கனவே மருமகள் வருவாள்,வந்தவுடன் இவர்களிடம் சண்டையிடுவாள், மகனை பிரித்து விடுவாள்,அதற்க்கு முன்பு அவளை தனியாக குடிபுகுத்த வேண்டும் அவளிடம் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.ஒரு முன் கருதல் தேவையே,அதற்க்கு என எதிர்மறையான கனவுகள் அல்ல தீர்வு,ஏன் அம்மாக்கள் மருமக்களை பற்றி நல்ல கனவு காண கூடாது?நான் எனது மருமகளை பற்றியும் அழகான கனவு காண ஆரம்பித்துவிட்டேன்.(என் மகன்கள் படிப்பது 7,3 வகுப்புக்களில்.)சிறுகுறிப்பு, என்னவரிடன் என் கனவை பற்றி பகிர்ந்து கொண்டிருந்தேன், பாபா- அத்தான் "என் மருமகள் நீல கண்ணுடன், வேற்று மொழி பெண்ணாக இருந்தால் எப்படி இருக்கும்" என  அவரிடம் கேட்ட போது, அவர் சொல்கின்றார் நல்லது தான் நீங்க இரண்டு பேரும் சண்டை போடது எங்களுக்கு புரியாது இருக்கும் என, அவருடைய கனவை பாத்தீங்களா?

2 comments:

  1. //அத்தான் "என் மருமகள் நீல கண்ணுடன், வேற்று மொழி பெண்ணாக இருந்தால் எப்படி இருக்கும்" என அவரிடம் கேட்ட போது, அவர் சொல்கின்றார் நல்லது தான் நீங்க இரண்டு பேரும் சண்டை போடது எங்களுக்கு புரியாது இருக்கும் என, அவருடைய கனவை பாத்தீங்களா? //

    :) :)

    ReplyDelete
  2. அருமையான பதிவு.

    இப்போது உள்ள சூழலில், எதிர் மறை கொண்ட எண்ணம் நிறைந்த நபர்கள் அதிகம் வாழும் உலகில், நாம் நல்ல கனவுகளை காண, நல்ல எண்ணங்களை வளர்க்க கூட கடும் பிரயத்தனம் செய்ய வேண்டி உள்ளது.

    ReplyDelete