7 Nov 2010

ஒபாமா வந்துட்டாங்கய்யா!! வந்துட்டாங்க!

ஒபாமா  அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு கிளம்ப ஹெலிகாப்ரரை நோக்கி நடக்க துவங்கியதில் இருந்து ஆங்கிலம் ஹிந்தி ஊடகங்கள் ஒபாமாவின் வருகையை பற்றி கதைக்க ஆரம்பித்து விட்டனர்.  ஒபாமா இந்தியா வருவதில்  என்ன லாபம் எதற்க்கு வருகிறார் அவர் கையெழுத்து இடும் திட்டங்கள் ஏது என  அலசி கொண்டிருந்தனர்.  மலையாள சேனல் கொஞ்சம் முன் சென்று அவர் வருவது வியாபர நோக்கத்திற்க்கே எனவும்,  மேலும் 3000 தொழில் வல்லுனர்கள் மற்றும் 30 கார் அணிவகுப்பு, மக்லேனின் கூற்று என பின்னி விலாசி கொண்டிருந்தனர்.   நம் தமிழ் சேனலில் செய்தியுடன் முடித்து கொண்டனர்.  அங்குள்ள சேனலில்  ஒபாமாவின் வருகையை பற்றி காரசாரமான விவாதம் நடை பெறும் போது நம் ஆட்கள் சரவெடி சரவணனுடன்  விவாதித்து  கொண்டிருந்தனர் இப்படியாக அவர் அவ்ருடைய ஆசிரியரை எந்த பட்ட பெயர் வைத்து அழைத்தார், பள்ளிக்கு மட்டம் போட்டாரா என!

ஒபாமா வரும் போது    தரப்படும் பரபரப்பான செய்தியின் போக்கு நமது அரசு தலைவர்கள் வெளிநாடு செல்லும் போது  "இவர் இந்த தேசத்திற்க்கு சென்றுள்ளார், திரும்ப இன்று வருகின்றார்  என்றதுடன் முடித்து கொள்கின்றனர்.  நமது தலைவர்கள் இதே போன்று ஒரு திட்டத்துடன்  அன்னிய நாட்டுக்கு சென்று வந்தார்களா எனவும் தெரியவில்லை.
பிரதிமா பாட்டில் கணவர், உறைவினர்கள், படைத் தளபதிகளுடன் கோயிலுகளுக்கு சென்று வந்த செய்தி தான் சித்திரத்துடன் பார்வையில் அடிபட்டது.  பிரதமர் சென்ற போது கூட மகள் மருமகன் மனைவியுடன் சென்று வந்ததை காண முடிந்தது.  மேலும் மேற்கு அயிரோப்பிய நாடுகளுக்கு பிரதமர், ஜனாதிபதி போன்றவர்களும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு துணை ஜனாதிபதியை அனுப்புவதாகவும் தெரிகின்றது. எம் மக்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தர சென்றுள்ளேன் என யாரும் சூளுரைத்து சென்றதாக ஒரு போதும் கண்டிருக்க வில்லை.

 எது எப்படியோ எனக்கு  ஒபாமா மற்றும் அவருடைய மனைவி ஹெலிகாப்ரில் ஏறுவதை ரசித்து பார்த்து கொண்டிருந்தேன். கைகளை வீசி கொண்டு இரண்டு பெயரும் அழகாக தாவி ஏறி  கொண்டிருந்தனர். மனம் விட்டு சிரிக்கின்றனர் பேசுகின்றனர் நம் தலைவர்களின் பிளாஸ்டிக் சிரிப்பு, கீழ் விழி பார்வை போன்று அல்லாது; ஒரு வேளை தள்ளு வண்டி, ரோபோ போன்ற தலைவர்களை கண்ட கழைப்பாக இருக்குமோ எனவும் தெரியவில்லை!
 மகாராஷ்டா அமைச்சர்கள் வரவேற்ப்பை அழகாக பெற்று கொண்ட அவர்கள் அவர்கள் நாட்டு அதிகாரிகளே கண்டுடன் அவர்கள் கலாச்சாரப் படி கட்டி தழுவி அன்பை பகிர்ந்து கொண்டு  அதிக நேரம் பேசி கொண்டிருந்தனர்.  இத்தருணத்தில் நமது தலைவர்கள் இலங்கை சென்று நம் சகோதரர்களே கண்டு சென்று வந்த  காட்சிகள் உங்கள் மன கண்ணில் கொண்டு வர வேண்டுகின்றேன்.

பின்பு பள்ளி, கல்லூரி மாணவர்களே சந்திக்கின்றார். பெரிய அரசியல் செய்திகள் மும்பை சவேரியார் கல்லூரி மாணவர்களிடம் பேசி உள்ளார். அதிலும் ஒரு மாணவி வடிவேலு அண்ணே கேட்பது போல் ஒரு கேழ்வியும் கேட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டை ஏன் தீவிரவாத நாடு என அறிவிக்க வில்லை என?  அதை தீவிரவாத நாடாக ஆக்குவதே நம் இந்தியாவும் அமெரிக்காவும் தான்  என தெரியாதோ,  என்னவோ? எல்லாம் பள்ளிப் பாட  அரசியல் தான். பாப்பாவுக்கு   போபால் பற்றியெல்லாம் ஏன் சொல்லி கொடுக்கவில்லை என தெரிய வில்லை?  மேலும் ஹெட்லி விஷயத்தை  மறைந்து விட்டாரே, அமைச்சர் சிதம்பரத்திற்க்காவது பயனுள்ளதாக இருந்திருக்கும்!  அமெரிக்கா நாட்டு அதிபரிடம் கேழ்வி கேட்க ஊடகவியாளர்கள், சமூக ஆவலர்கள் என யாரையும் நம்பாது  மும்பை மாணவிகளிடம் பணியை கொடுத்து விட்டார்கள் அதன் மர்மவும் தெரியவில்லை.

  நான் இந்தியாவின் கலாச்சாரத்தை, இயற்கை அழகை காண செல்கின்றேன், என பொய் சொல்லாது,  போத்திகீஸ்காரர்கள், கிழக்கி இந்திய ஈஸ்ட்டு இந்தியன் கம்பனி போல இந்தியா நாட்டிற்க்கு  வியாபார நோக்கத்திற்க்காவே வந்திருக்கின்றேன்  என தைரியமாக சொல்லி வந்திருக்கும் ஒபாமா அவர்களே  வருக வருக!!! உங்களே போன்ற உண்மை பேசும் தலைவர்களே எங்களுக்கும் தேவை.

இன்னும் ஒரு செய்தி, அவுட் சோர்சிங் (வெளி நாட்டு பணி -BPO) என்பது நம்மவர்களே கொண்டு இங்கிருந்தே குறைந்த ஊதியத்தில்  அங்குள்ள வேலையை செய்ய வைப்பதே.  நமது அமைச்சர்களின் பணியையும் இம்முறையில் அமெரிக்கர்களால் அவுட் சோர்சிங் என்ற முறையில்  எடுத்து கொண்டால் நாம் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கலாமோ? அவர்களுக்கும் வேலை வாய்ப்பும் கிட்டும்!

0 Comments:

Post a Comment