6 Feb 2011

குடியரசு தலைவர் உரை!


 என் அருமை குடிமக்களே 62 வது குடியரசு தினத்தில் உங்கள் அனைவருடன் கதைக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இந்த நாட்களில் மட்டுமே பேச அனுமதி கிடைக்கின்றது. ஆகயால் மனம் திறந்து உங்களிடம் பேச வந்துள்ளேன். என் உதவியாளர்  My fellow citizen என்ற தலைப்பில் எழுதி  தந்த உரையே குப்பையில் போட்டு விட்டு, மழலை பள்ளி மாணவர் போல் பார்த்து வாசிக்க கூடாது என்ற உறுதியில்  உங்கள் முகம் நோக்கி பேச வேண்டும் என வந்துள்ளேன்.


 நம் நாடு சுதந்திரம் அடைந்து வல்லரசு ஆக போகின்றேம் என்று பீற்றி கொண்டாலும் 80 % மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் தான் உள்ளார்கள் என எண்ணும் போது கவலையாக தான் உள்ளது. 2008 ல் நான் பேச வந்த போது விட ஊழல், லஞ்சம் பெருகியுள்ளதை அறிவேன். மத்திய அரசு, மாநில அரசு என பாகுபாடு இல்லாது “ஊழலே எங்கள் கொள்கை” என  தலைவர்களும், அரசு அதிகாரிகளும் களம் இறங்கி இருப்பதை எண்ணி வருந்துகின்றேன். ஸ்பெக்ரம் ஊழல், ஆதர்ஷ் அடுக்கு மாடி ஊழல், ஆசிய விளையாட்டு ஊழல் என எங்கு பார்த்தாலும் ஊழல் என்பதை என்னால் ஜீர்னித்து கொள்ளவே இயலவில்லை.  நான் கூட 3 படை அதிகாரிகள், என் குடும்பத்தார்கள் என  கோயில் குளம் போய் வந்தும் பலன் இல்லையே என எண்ணும் போது என்னையே வருந்தி கொள்கின்றேன். ஆகையால் பணி ஓய்வுக்கு பின்பு கிடைக்கும் மாதம் 50 ஆயிரம் ஓய்வு ஊதியம்  வேண்டாம் என சொல்லி விட்டேன்.


அரசியல் அமைப்பு சட்டம், நாட்டு நலன், ஒருமைப்பாடு என்ற பெயரில் மக்களின் கருத்து சுதந்திரதை நெரிப்பதை நிர்த்தி கொள்ள வேண்டும்!  ‘மக்கள் கருத்து சுதந்திரம்’ என்ற பெயரில் ஊடகங்கள் நடத்தும் நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளை புரக்கணிக்குமாறும் கேட்டு கொள்கின்றேன். மக்கள் துன்பத்திற்க்குள்ளாகும்  விலைவாசி ஏற்றம், கள்ள சந்தையால் வெங்காயம் விலை கூடியது பற்றி விவாதிக்காது கணவர் மனைவிக்குள் சண்டை மூட்டி விடுவதும், தனி குடும்பமா கூட்டு  குடும்பமா என குடும்பத்தை பிரிப்பதும் சொட்ட தலை வழுக்க தலை என பேசி மக்களை அவமானப்படுத்துவதும், கல்லூரி மாணவி மாணவர்களை  படிப்பு, வேலை விடுத்து ஆக்கம் கெட்ட கேழ்வி கேட்டு குழப்பி கொண்டிருக்கும்  கோபி நாத் தலைமையில் கச்சேரி நடத்துபவர்களை அந்தமானுக்கு கடத்த சட்டம் தீட்ட வேண்டும்.


மேலும் மானாட மயிலாட என்ற ஆட்டத்தை குடும்பத்துடன்  பார்த்து ஜொள்ளுவிடும் தமிழக கலாச்சாரம்  பற்றி ஆராயவும் உத்தரவு இட்டுள்ளேன்.  நடந்து என்ன, குற்றம் என்ற பெயரில் பேய் கதைகள் பரப்பும் சேனலுகளையும் ஒழிக்க திட்டம் இட்டுள்ளேன். பழைய அரச சபையிலுள்ள கவிஞசர்கள் போல் புகழ்மாலை- கவிஞசர் வாலி போன்றோரை  பேணாவை  இல்லாத காட்டில் கடத்தவேண்டும்! இந்த வருடம் தமன்னா அனுஷ்காவுக்கு கொடுத்த கலைமாமணி விருதுவிலும் ஊழல் உள்ளதாக  கேள்வி பட்டதால் விசாரணை  நடத்த திட்டம் இட்டுள்ளேன். மச்சான் நடிகை நமிதாவுக்கு அடுத்த வருட   விருது புக் செய்த்தாகவும் கேள்விப்பட்டேன்.


அடிப்படை தேவையை நிவர்த்தி செய்ய வக்கில்லாத அரசு ஏன் விண் வெளிக்கு  ராக்கட் செலுத்தி பணத்தை கரியாக்குகின்றது என்ற கேள்வி என்னில் எழாதில்லை. கடை வீதியிலும் வீட்டு முற்றத்திலும் ஓடும் சாக்கடையை சுத்தம் செய்ய வழியற்ற நமக்கு நிலாவில் வசிக்க ஆசை  வரலாமா? நிறைய கேள்வி கேட்க துவங்கினால் என் பதவிக்கு ஆபத்து வந்து விடும் என்ற எச்சரிக்கை என்னை மௌனிக்க செய்கின்றது. 


மேலும் தமிழக பெண்களை சுய உதவி குழு என்ற பெயரில் வட்டி முதலாளிகளாகவும் பெண் தாதாக்களாகவும் உருவாக்குவதாகவும் செய்தி வந்துள்ளது. சீட் கிடைத்தால் இந்திய ஒருமைப்பாடு, இல்லை என்றால் தனி நாடு கோரிக்கை என பண்பற்ற  அரசியல் நடத்தி வரும் அரசியல்வாதிகள், மக்களுக்கு 1 ரூபாய்க்கு மோசமான அரிசி 80 ரூபாய்க்கு வெங்காயம் என ஏமாற்று அரசியல்  நடத்துவதும், செம்மொழி என  கூறி கொண்டே தமிழை சென்னை தமிழ், அமெரிக்க தமிழ் என தமிழை அழிப்பதும் தெரிந்ததே!


இருப்பினும் இந்த கொடிய செயல்களுக்கு முடிவுகட்டுவது உங்கள் கையில் தான் உள்ளது. ஏனெனில் நான் வகிப்பது வெறும் அலங்காரப் பதவி தான் என்பது உங்கள் யாவருக்கும் தெரிந்ததே.  


போராளிகள் என்ற பெயரில் நம் அண்டை நாட்டவரான ஈழ தமிழர்களை கொல்ல வழி சொல்லி கொடுத்த நாம், நம்  சொந்த மக்களான ஏழைகளை நக்சல்கள் என கூறி பழி தீர்த்து கொள்வதை என்னால் ஏற்று கொள்ள இயலவில்லை.
 
நம் நாட்டை, டாடா, ரிலயன்ஸ் போன்ற பணம் முதலைகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். முதன்மையாக முதுகு தண்டுவடம் அற்ற உபதேசி- பிரதமரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.  நாட்டு பற்ற அற்ற சோனியா ராகுலிடம் நம்பிக்கை கொள்ள வேண்டாம்.  ஒருவன் ஒரு முறையே தேர்தலில் போட்டியிட முடியும் என சட்டம் திருத்தவேண்டும். பள்ளி கல்லூரிகளை பொது உடமையாக்குவோம்.

வீட்டுக்கு வீடு செடி நட உற்சாகப்படுத்த வேண்டும். பச்சை புரட்சி என கூறி மண்ணையும் மக்களையும் கான்சர் போன்ற கொடிய நோய் தாக்க காரணம் இனி ஆகலாகது. குடிசை இல்லாத நாட்டை உருவாக்குவோம் எனக் கூறி குடிசை மக்களை ஊரை விட்டு துரத்தும் அவலத்தையும் களைய வேண்டும்.


நம் நாடு தன் நிறைவு அடைந்து விட்டது வல்லரசு ஆகி விட்டது என என்னால் பொய் சொல்ல இயலாது . சுதந்திரமான இந்திய, குடியரசு இந்தியா என்ற பெயரில் நம் நாட்டில் நிகழும் கொடிய செயல்கள் ஒழிந்து உண்மையான மக்களாட்சி மலரட்டும் என்று ஆசி கூறி விடை பெறுகின்றேன். எகிப்து போன்று மக்கள் புரட்சி வெடிக்கும் முன் பதவியை விலக வேண்டும் என்ற ஆசையுடன் உங்களிடம் விடை பெற்று கொள்கின்றேன்.
ஜெய் ஹிந்த்!!!!!!! 

0 Comments:

Post a Comment