12 Feb 2011

ஒரு புலனாய்வு கதை!


ஆருஷிக்கு இன்று பிறந்தநாள் கொண்டாட்டம்.  நேற்று தான் சிங்கபூர் சுற்றலா சென்று விட்டு வந்திருந்தனர்.  அவள் நண்பர்களை அழைத்திருந்தார்கள். அவளுடைய பெற்றோர் மருத்துவர்கள் ஆனதால் அந்த ஊரிலுள்ள மருத்துவ நண்பர்கள் குடும்பம் குழந்தைகள் படை சூழ  வந்திருந்தனர். சிலர் அவர்கள் பணியாளர்களையும் கூட அழைத்து வந்திருந்தனர், அவர்கள்  குழந்தைகள் முரண்டு பிடித்தால் அடக்குவதற்க்கு  பயன்படும் என.

ஆருஷியின் அப்பா அவளுக்கு பிறந்த நாள் பரிசாக ஒரு கணிணி வாங்கி தந்திருந்தார்! அவள் நண்பர்களை அழைத்து காட்டினாள். அவர்கள் இணைய முகவரியும் வாங்கி வைத்து கொண்டாள்.  எல்லா வசதியுடனான புது தொழில்நுட்பம் அடங்கிய கணிணியாக இருந்தது.
 அவள்  அப்பாவை தான் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அவள் சாயல் கூட அப்பாவை ஒத்தே இருந்தது. அம்மா ஒரு “மாதிரி” மருத்துவராக இருந்தார் ஆனால் அம்மாவாக அல்ல.   அவள் பெற்றோர் கல்லூரியில் படித்தபோது காதல் திருமணம் புரிந்ததால் உறவினர்கள் விட நண்பர்களே அதிகம் இருந்தனர். ஆகையால் பாட்டி தாத்தா மாமா சித்தி சித்தப்பா போன்ற உறவுகள் அவளை சுற்றி இருக்க வில்லை. அப்பா ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அம்மா என்ற பெரிய பணக்காரி மனைவி அமைந்ததால் குறுகிய காலத்துக்குள் பணக்காரர் ஆனாலும் உறவுகள் இல்லை என்ற ஏக்கம் அவருக்கும் இருந்தது. ஆருஷியே அவருக்கு எல்லாமாக இருந்தார். 
வேலைக்காரர் புக்கா சிங்கு தான் அவளுக்கு  உறவினர், வேலைக்காரர்   என எல்லாமாக இருந்தான்.  அவள் பேசுவதை கேட்பது  அவளுக்கு கதை சொல்லி கொடுப்பது என புக்கா சிங் ஆகவே இருந்தான்.  பள்ளி விட்டு வரும் போது புக்கா சிங்கு தான் புத்தக பைய்யை வாங்கி வைத்து விட்டு பழ ஜூஸ் அல்லது பிரடு டோஸ்டு ஓவனில் இருந்து எடுத்து தருவார்.


பல நாட்கள் அம்மாவும், அப்பாவுடைனே வீடு வந்து சேர்ந்தார். அவருக்கு வேலையுடன் இருந்த ஈடுபாடு வீட்டுடன் இருந்திருக்க வில்லை.  வீட்டிலுள்ள பொருட்கள், தன் மகள் ஆருஷியை கூட வேலைக்காரர்கள் தெரிந்த அளவில் அவள் அம்மா தெரிந்திருக்க வில்லை!  ஆருஷி யின் 13 வயது  பிறந்த நாள் சில நாட்கள் பின்பு அவர் அப்பா ஒரு முறை அம்மாவிடம் சொல்வது கேட்டது, ” நீ இனி பகுதி நேரம் மருத்துவ மனையில் வேலை செய்தால் போதும். நம் பெண் பள்ளி  விட்டு வரும் போது வீட்டில் இரு என” . ஆனால் அம்மாவோ அவ என்ன சின்ன குழந்தையா வேலைக்காரன் புக்கா சிங்கிடம் சொல்லியுள்ளேன் . அவன் பார்த்து கொள்வான் என பதில் கூறுவதும் கேட்டது.  
புக்கா சிங்கு பங்காள் தேச இன கலவரத்தின் போது இங்கு வந்து சேர்ந்தார். ஆருஷியின் தந்தையின் மருத்துவ மனையில் உதவியாளராக பணி எடுத்து கொண்டிருந்தார். அவரின் பொறுப்பாக பணி செய்வதை கண்டு வீட்டு வேலைக்கு என அமர்த்தினார் அவர் அம்மா!  உணவு தயாரிப்பது ஆருஷியை பள்ளிக்கு அனுப்புவது, பள்ளி விட்டு வந்தவுடன் உணவு கொடுப்பது. தூங்கும் முன் குடிக்க ஜூஸ் கொடுப்பது என சகலவும் அவரே பார்த்து கொண்டார். ஆண் வேலையாள் மேலும் முதியவர் என்பதால் ஆருஷி அம்மா எல்லா வகையிலும் தற்காப்பு என் எண்ணினார். அவரின் அறை ஆருஷியின் வீட்டின் மேல் மாடியில் இருந்தது. வீட்டுக்கு உள் வருவதற்க்கும்   வெளியில் செல்லவும் இரு கதகுகள்  இருந்தது. புக்கா சிங்கை தாத்தா என்றே கூறி வந்தாள் ஆருஷி. வீட்டில் தனியாக இருக்கும் போது நேரம், போக அவரிடமே பேசி கொண்டிருப்பாள் டிவி பார்க்காத போது. அவருக்கும் மகன், மகள் பேரபிள்ளைகள் என பெரிய குடும்பம் இருந்தது .

 புக்கா சிங்கின் மகள் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவரின் தூரத்து உறவினரான ஒரு வாலிபனுடம் காதலில் இருந்தார். அவனை திருமணம் செய்ய புக்கா சிங்கு அனுமதித்தாலும் வேலை இல்லை என்பது ஒரு குறையாகவே இருந்தது. அவன் செவிலியர் பயிற்ச்சி  பெற்றவனும் கூட. புக்கா  சிங்கு ஒரு முறை ஆருஷி அப்பாவிடம் தன் உறவினருக்கு வேலை தந்து உதவும் படி கேட்டிருந்தான். மருத்துவரும்  தேவை வரும் போது அழைப்பதாக சொல்லியிருந்தார். அவரிடம் வேலை பார்த்த  ஒரு நபர் திடீர் என வெளி- நாட்டில் வேலை கிடைத்து சென்றதால் வேலையாள் தேவை வந்தது. புக்கா சிங்கிடம் உறவினரை அழைத்து வர கூறினார். டாக்டருக்கு புக்கா சிங்கின் உறவினரை பார்த்தவுடனே பிடிக்க வில்லை.  அவன் பார்வை செயல் எல்லாவற்றிலும் ஒரு திமிர் தென்படுவதாக தோன்றியது. ஆனால் வேறு வழியில்லை. சில கன்டீஷனுடம் வேலைக்கு சேர்த்து கொண்டார்.


 டாக்டர் இல்லாத போது அரட்டையடிப்பது, வேலையின் கவனம் கொள்ளாது அசால்டாக இருப்பது  தொலை பேசியில் கதைத்து கொண்டிருப்பது என எரிச்சலையே கொடுத்தது அவருக்கு வரும் நாட்களில் . ஒரு முறை ஒரு நோயாளியின் பல்லை பிடிங்கி கொண்டிருந்த போது ஒரு கருவி கேட்டால் இன்னொன்று எடுத்து கொடுத்தவுடன் கோபத்தில் சென்னியில் ஒரு அடி கொடுத்துள்ளார்.  அவனுக்கு சுரீர் என கோபம் வந்து விட்டது. டாக்டரிடம் ஏதும் சொல்லி கொள்ளாது வீட்டிற்க்கு சென்று விட்டான்.  மறுபடியும் இரண்டு நாள் கடந்து வேலைக்கு வந்த  போது டாக்டரும் கொஞ்சம் திட்டி விட்டு வேலைக்கு மறுபடியும் எடுத்து கொண்டார்.


அவன் வேறு வழியல்லாது வேலைக்கு சேர்ந்தாலும் டாக்டரிடம்  மனதில் கோபமாக இருந்தது. டாக்டரும், அவர் நோயாளிகளிடம் வைத்து  இவனை தரக்குறைவாக திட்டுவது மனம் நோகவே செய்த்து. அவன் கோபத்தை தீர்த்து கொள்ள நண்பர்களிடம் சேர்ந்து குடித்து விட்டு டாக்டரையும் அவர் மனைவியையும் தரக்குறைவாக திட்டி தன் மனக் கவலையை தீர்த்து கொண்டான்.


ஒரு முறை டாக்டரின் பருவ வயது மகள்  ஆருஷியை மருத்துவ மனையில் வைத்து போது பார்த்துள்ளார். இப்போது குடித்தவுடன் டாக்டரை திட்டுவதற்க்கு பதிலாக அவன்  பேச்சு முழுக்க ஆருஷியை பற்றியே இருந்தது. 


பின்பு ஒரு செவிலியன் கிடைத்தவுடன் இவனை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார் ஆருஷியின் தந்தை. திடீர் என்று வேலை பறிக்க பட்டதால் அவன் திருமணவும் தள்ளி போய் விட்டது. அவன் காதலியும் உடன் திருமணம் வேண்டாம், ஒரு நிலையான வேலையாகட்டும் என கூறி விட்டாள். இருப்பினும் புக்கா சிங்கை சந்தித்தே வந்தான்.  இரவு நேரங்களில் அவன் , ஆருஷீயின் பெற்றோரின் நண்பர்கள் வீட்டில் வேலைக்கு இருந்த அவன் நண்பர்களுடன்  சேர்ந்து குடித்து கும்மாளம் இட்டு தன் கவலையை தீர்த்து கொண்டான். இவர்கள் வேலை பார்க்கும் வீட்டிலுள்ள எஜமானர்களின் பிள்ளைகளை பற்றியும் அவர்களின் தகாத உறவுகளை பற்றிமே பேசி சிரித்து கொண்டனர்.  ஆருஷியை பற்றிய பேச்சு கொஞ்சம் அதிகமாகவே ஓடியது. அவர்களுக்கு  அவளுடைய பேச்சு, உடை நடை மட்டுமல்ல உடல் அமைப்பை பற்றியும் கூட கேலி பேசி கொண்டிருந்தனர். 


டாக்டர் வீட்டிலுள்ள பிராந்தியை  இளைஞர்களுடன் பங்கிட்டு நட்பை மேன்ப்படுத்தி தானும் ஒரு இளைஞன்  போல் எண்ணி கொண்டு ஆட்டம் போட்டு வந்துள்ளான் புக்கா சிங்கும்.  ஆருஷி அவனிடம் கேட்கும் சில பேச்சுக்கள் கூட இவர்கள் மத்தியில் கேலி பேச்சாக இருந்துள்ளது.  
அன்றும் ஆருஷி புக்காஜியிடம் பூரியும் உருளை குழங்கு குறுமா கேட்டுள்ளாள். அவளுக்கு உணவு பரிமாறி விட்டு பாத்திரத்தை சுத்தம் செய்து கொண்டு இருக்கும் போது அவள் பெற்றோர் வந்துள்ளனர். அவளுடைய அப்பா அவளுக்கு ஒரு புகைப்பட கருவி வாங்கி வந்துள்ளார்  இந்த வருட பிறந்த நாளுக்கு என. ஆருஷி சில புகைப்படங்கள் அவள் பெற்றோர்களை எடுத்து , மகிழ்ச்சியாக அவர்களிடம் பேசி கொண்டு இருந்து விட்டு தூங்க சென்றுள்ளாள்.  புக்கா சிங்கும் ஆருஷீ பெற்றோருக்கு உணவை கொடுத்துள்ளான். ஆருஷி அப்பா என்றும் குடிக்கும் பிராந்தியை எடுத்து கொடுக்க கூறியுள்ளார். ஆருஷி அம்மாவும் என்றும் போல் தன் பங்கு பிராந்தியையும் குடித்து விட்டு தூங்க சென்று விட்டார்.


புக்கா சிங் தூங்க  என மாடிக்கு சென்று விட்டான்.  12 மணிவாக்கில் அவன் நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்து விட்டனர்.  அப்போது அவர்களுடைய மூளையில் பூதம் வேலை செய்ய ஆரம்பித்தது. புக்கா சிங்குக்கு அளவுக்கு மீறி பிராந்தி  கொடுத்தனர்.  பின்பு  அவர்கள்   வீட்டுக்குள் வந்து ஆருஷி அறைக்கு சென்று அவளை  மானபங்க படுத்தும் நோக்குடன் நுழைந்துள்ளனர். தள்ளாடி வந்து புக்கா சிங் தடுத்துள்ளான்.  அதற்க்குள் ஆருஷியும் தூக்கத்தில் இருந்து விழித்து கத்தியுள்ளாள்.  குளிரூட்டபட்ட அறை என்பதால் சத்தமும் வெளிவரவில்லை. ஆருஷி காட்டி கொடுத்து விடுவாள் என பயந்து அவளை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு வேலைக்காரன் புக்கா சிங்கையும் மாடிக்கு இழுத்து சென்று கொன்று விட்டு ஓடி விட்டனர்.

ஆருஷி அம்மா இப்போது தான் வருந்தினாள்.  வேலை, பணம் என்று இருந்து தன் ஒரே மகளை பலி கொடுத்து விட்டேனே என அழுதாள் தன் பொறுபற்ற  செயலை நினைத்து. தன் குழந்தை காத்திருந்த நாட்களில் தனக்கு பேச நேரமில்லாதிருந்தது.  இன்றோ தன் குழந்தையும் போய் விட்டது என எண்ணி எண்ணி அழுதார்!!!

( போலிஸ் ஒரு கதையும் ஊடகம் சில கதைகளும், புலனாய்வுத் துறை வேறு விதமாகவும் கதைக்கின்றது. என் பங்குக்கு ஒரு புலனாய்வு சேவையும் செய்துளேன். உங்கள் புலனாய்வு கருத்துக்களும்  சொல்லுங்களேன்.)

0 Comments:

Post a Comment