மாத்தூர் தொட்டி பாலம் நோக்கி நாங்கள் போய் கொண்டிருக்கின்றோம். இது 1966 ல் காமராசர் முதல் அமைச்சராக இருந்த போது, திருவட்டார் பஞ்சாயத்தை சேர்ந்த பகுதியில் கட்டபட்டதாகும். ஆசியாவிலே மிகவும் உயரம் ஆனதும் நீளமானதுமான இப்பாலம், 115 அடி உயரம் கொண்ட 28 தூணுகளின் மேல் 1240 அடி ( 1 கி.மீ) நீளமும் 7 ½ அடி வீதியிலும் இரண்டு மலைகளை இணைக்கும் பாதையாக கட்டப்பட்டுள்ளது. சுற்றலா பயணிகளின் கவனத்தை கவரும் விதம் அழகாக காட்சி தரும் மாத்தூர் தொட்டி பாலம் விளவம்கோடு, கல்குளம் என்ற இரு கிராமங்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் விதம் ‘பறழியார்’ என்ற நதியின் மேல் கட்டப்பட்டுள்ளதாகும்.
போகும் வழியாவும் செடி கொடிகளால் கேரளாவின் தனி அழகில் நாஞ்சில் நாடு காட்சி தருகின்றது. நம்மவர்கள், அன்னாச்சிப் பழம் செடி வைத்தால் நல்ல பாம்பு படம் எடுத்து விடும் என்று படம் காட்டுவது உண்டு. இங்கோ வீட்டுக்கு வீடு சுற்று சுவர் போன்று அன்னாச்சி பழம் செடி உள்ளது.
பசி மயக்கம் ஆரம்பித்தது. மார்த்தாண்டத்தில் ஒரு உணவகத்தில் உணவருந்தினோம். எங்கள் மேஜைக்கு எதிர்பக்கம் இருந்த ஒரு பெண் போலிஸை விழுந்து விழுந்து கவனித்த சர்வர் எங்களை கண்டும் காணாதது போல் பாவித்தார். போலிஸ் பெண் மணி பழைய பற்றில் சேர்த்து விடு என்று விடை பெற்று சென்ற பின்பே எங்கள் அருகில் வந்தார். பிரியாணி, புரோட்டா என்று வயிற்றை நிரப்பி அடுத்து சிதரால் கோயில் நோக்கி சென்று கொண்டிருந்தோம். திருவனந்தபுரத்தில் இருந்து 80 கி.மீ உம் கன்னியாகுமாரியில் இருந்து 45 கி.மீ தள்ளி உள்ளது இக்கோயில்.
அழகான குடியிருப்புகள், விருந்தினர் குடியிருப்புகள் தெரிய தொடங்கியது. வேளி என்ற கடற்கரையில் 19 கி.மீ ரோட்டின் இருகரையிலும் சங்குமுகம் வியாபித்துள்ளது. ஒரு நபருக்கு ஒரு நாள் முழுக்க 5 ரூபாய் மட்டுமே கட்டணம். கடற்கரையில் அழகான ஒரு பூங்கா, கேரளா கலை ரசனையுடனான அழகிய சிற்பங்கள், மிதக்கும் உணவகம், மிதக்கும் பாலம் என மொத்ததில் கேரளா அழகுணற்ச்சியுடன் அமைத்திருந்தனர்.
மிதக்கும் பாலம் வழி கடற்கரை சென்றடைந்தோம். வரிசையாக இருந்த சிறு சிறு கடைகளின் முதளாளிகள் பெரும் பாலும் நைற்றியணிந்த பெண்களாகவே இருந்தனர். நைற்றி தேசிய உடையாக வெகுதூரமில்லை என்றுமட்டும் தெரிந்தது.
இணையத்தில் தங்க கலர் கொண்ட மணல் சுத்ததிற்க்கு பெயர்பெற்ற கடற்கரை என்று இணையத்தில் எழுதி இருப்பதை நம்பலாகாது. கடல் அலை கொஞ்சம் வக்கிரமாகவும் சகதி மண் கலரில் தான் இருந்தது. திடீர் என அலை கரைகடந்து வந்து பயமுறுத்தியது. காவலாளிகள் கம்புடன் மக்களை கட்டுக்குள் வைத்துள்ளனர். ஐஸ் கிரீம் விற்பவர்களே விற்கவும் குப்பையை பொறுக்கவும் செய்கின்றனர். பல பொழுதும் இவ்வகையான இடங்களை அசுத்தப்படுத்துவதற்கு அங்குள்ள உணவகமே மிக பெறும் பங்கு அளிக்கிறது என்பது மறுக்க இயலவில்லை. குப்பையிட என ஒரு குப்பை தொட்டிவைக்காது சுத்தம் என்பதில் ஐயம் கொள்ளவே வைக்கின்றது. இக் கடலை கண்ட போது தமிழகத்திலுள்ள மணப்பாடு கடலின் அழகே மனதில் வந்தது. நம் தமிழக அரசு இவ்விதம் ஒரு திட்டத்துடன் செயலாற்றினால் அழகான சுற்றலாத் தலம் உருவாக்கலாம். சங்குமுகத்தை பின்பற்றி தமிழகத்தில் உருவாக்கிய சங்குத் துறைமுகம் கூட ஒரு சங்குடன் கவனிப்பாரற்று தான் உள்ளது.
அங்கு வரும் பயணிகள் பெரும் பகுதியானோர் அப்பகுதி மக்களாகவே தெரிந்தனர். வெளிநாட்டு பயணிகள் கண்ணில் படவில்லை. கோவளத்தின் வசதி இங்கு இல்லாததாக கூட இருக்கலாம். மலையாளி அம்மாக்களை கண்டு கொண்டே நிற்கலாம். பல தமிழக அம்மாக்கள் போல் அல்லது அழகான உடை அலங்காரத்துடன் பொலிவான முகத்துடன் குழந்தை குட்டி யுடன் வலம் வருகின்றனர்.
சங்கு முகத்தில் இருந்து திரும்பும் போது ஏதோ ஏமாற்றபட்ட காதலி போல் மனதில் ஒரு கவலை ஊஞ்சலாடி கொண்டே இருந்தது. பின்பு மறுபடியும் இணையத்தில் உலாவந்த போது தான் தெரிந்தது, பக்கத்திலுள்ள 'ஜலகன்னியகா' என்ற புகழ்பெற்ற சிலையை பார்க்காது வந்துள்ளது. சங்குத் துறைமுகம் இன்னும் அழகுபடுத்த சுத்தபடுத்த வேண்டி நிற்பதாகவே எனக்கு படுகின்றது. நேரம் மாலை 6 அஸ்தமிக்கும் கதிரவனை கண்டு கொண்டு திரும்பினோம் திருவனந்தபுரம் பட்டிணம் நோக்கி. அதிகாலை 1 மணிக்கு நெல்லையில் எங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.