9 May 2012

பல்கலைகழக வீழ்ச்சியும் மாணவ சமூகவும்!

நாம் படித்த, வேலை செய்யும் பள்ளி, கல்லூரி, பல்கலைகழங்கள் மேல்  உணர்வு பூர்வமான ஒரு தொடர்பு நமக்கு எப்போதும் உண்டு. பயணங்களில் நாம் செல்லும்  போது நாம் படித்த பள்ளி கல்லூரியை ஒரு முறையேனும் திரும்பி பார்க்காது இருப்பது இல்லை, பெருமையாக மற்றவர்களிடம் சொல்லுவது மட்டுமல்ல நமக்கு ஒரு மதிப்பு தரக்கூடியதும் நம் தன்நம்பிக்கைக்கு உறுதுணையாக இருப்பதும் ஆகும். நம் குடும்ப உறவினர்கள் போல் நம் சொந்த வீடு போல் நம் நண்பர்கள் போல் நாம் படித்த கல்வி நிலையங்களுடன் ஒரு அழியாத உணர்வு பூர்வமான பந்தம் நம்மை ஆட் கொள்கின்றது. 

ஆனால் சமீபத்திய பத்திரிக்கை செய்தி வழியாக தினம் ஒரு கெட்ட  செய்தி என கல்வி நிலையங்கள் பற்றி  வருகின்றது. பாலியல் துன்புறவு என மனோன்மணியம் பல்கலைகழகம் வந்தால், மாணவர் தற்கொலை என அண்ணா பல்கலைகழகம் இடம் பிடித்துள்ளது.  எல்லாம் போதாது என்று இன்று வேளாண்மை பல்கலைகழக துணைவேந்தர் மேல் ஊழல் புகார்!

இது எல்லாம் பொய் புகார் என்றால் ஏன் மெத்தை படித்தவர்களால் சட்ட உதவி கொண்டு நேர் கொள்ள இயலவில்லை.   படித்தவர்கள் எல்லா வித அடிமைத்தனத்தில் இருந்தும் கல்வியால்  விடுதலை பெற்றவர்கள் என்றால் சமீப காலமாக பதவிக்கும் பணத்திற்க்கும் அடிபணிந்து கிடப்பதாலே இந்த விதமான சிக்கலுக்கு உள்ளாகுகின்றனர் என்றே தோன்றுகின்றது.  துணைவேந்தர் தேர்வில் இருந்து பட்டம் கொடுக்கும் விழா என எல்லா நிலைகளிலும் அரசியல் விளையாடுவதால் கல்வியின் தரவும் கல்வியாளர்களின் தரவும் குறைந்து விட்டது.  சமூகத்திற்க்கு எது சரிஅல்லது தவறு என்று எடுத்து கூற வேண்டிய பேராசிரிய பெருமக்கள் ஊழலில் முட்டி மோதி அல்லாடுவது கண்டு வேதனையும் வெட்கமாகவும் உள்ளது.  அடிப்படை தகுதியான நேர்மை கூட கல்வி  தரவில்லை என்றால் படித்து பதவியில் வந்து என்ன பிரயோசனம்?

மனோன்மணியம் பல்கலைகழகத்தில் சமீபத்தில் பாலியல் வழக்கில் ஒரு பேராசிரியரை  வெளியேற்ற வேண்டும் என மாணவ சமூகம் கொதித்து எழுந்தது. இதன் உண்மை தன்மை பற்றி பின் வந்த செய்திகளில் தகவல்கள் கிடைக்கவில்லை. ஒரு பக்கம் மட்டும் தவறு என்று எடுக்காது பல்கலைகழகத்தில் பயிலும் மாணவர்கள் முதுகலைபட்டம் பெறும் மாணவர்கள் என்பதால் இவர்கள் பங்கும் எடுத்து கொள்ள வேண்டி வருகின்றது.  மதிபெண் பெறவேண்டும் என்ற நோக்குடன் பேராசிரியர்களிடம்; உடன் படிக்கும் மாணவர்களை கோள் மூட்டி ஒட்டி உறவாடும் பல மாணவர்களை காண இயலும்.  இந்த விடயங்களில் மாணவர்களுக்கும் தன்மானம் தன் நம்பிக்கை இருப்பது அவசியம்.

இன்னும் ஒரு பேராசிரியர் பல அவமானங்களுக்கு உள்ளாகினார். அவர் காலை வந்து தன் பையை தன் இருக்கையில் வைத்து விட்டு வெளியில் சென்றதும் சிலர் அறையை பூட்டியிட்டு அவரை 2 மணி நேரம் வெளியில் காத்து  நிற்க வைத்தனர்.  அப்பேராசிரியர் படமுடன் செய்தியும் வந்தது அடுத்த நாள் பத்திரிக்கையில். இப்பேராசிரியர் ஆங்கிலத்துறையிலே ஆங்கிலத்தை மிகவும் எளிதாக கற்று கொடுக்க வல்லவர்.  இவர் வகுப்பில் ஒரு பருவம் இருந்துள்ளேன் என்பதால் இவரின் வேலையின் மேலுள்ள ஈடுபாடு சுறுசுறுப்பை கண்டுள்ளோம்.    பொதுவாக ஆங்கில ஆசிரியர்கள் என்றாலே ஏதோ லண்டனில் இருந்து குடியேறியது போல் நடந்து கொள்ளும் சூழலிலும் மாணவர்கள் மன நிலையை புரிந்து எளிமையாக பாடம் எடுப்பவர்.  ஆனால் பல்கலைகழக ஆட்சிக்குழு இவரை போன்ற  கல்வி கற்று கொடுக்கும் திறைமையான பேராசிரியர்களுக்கு நிர்வாக பதவிகளை கொடுத்து மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் நேரத்தை திருடி விடுகின்றனர்.  இந்த பேராசிரியரோ முதுகலைப்பட்டம் தங்க பதக்கத்துடன் வென்றவர் என்று மட்டுமல்ல  முனைவர் பட்டத்தில் உலக அளவிலுள்ள தரவரிசையில் இடம் பிடித்து தேர்வாகியவர் எபதும் கூடுதல் தகவல்.  ஆனால் பதவி போட்டியில் மாட்டி இவர்களின் வாழ்கை மட்டுமல்ல இவரால் சிறப்பாக கல்வி கற்க கூடிய பல மாணவர்களின் உரிமையும் பறிக்கப்படுகின்றது. தேற்வில் ஜெயித்தவர்களால் வாழ்க்கை என்று வரும் போது சிறப்பாக  முன்மாதிரியாக வர இயலவில்லை என்பது நம் சமூக சீரழிவா, கல்வி நிலைகளில் இழிவு நிலையா அல்லது தனி மனித சறுக்கலா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

ஊடகவும் தீர விசாரித்து கல்வி செய்தியை தர முன் வரவேண்டும். கல்வி சம்பந்தமாக பொதுவான மக்கள் துன்புறும்  பல பிரச்சைகள் ஊடகம் வாயிலாக வெளி வராது சில பிரச்சனைகள் மட்டும் வெளிவருவதில் அரசில் உள்ளது என்று தான் கவலையாக உள்ளது  இச்செய்திகளால் இந்த பல்கலைகழகங்களில் பயிலும் பயின்ற  பெரும் வாரியான படித்த மக்களை வெட்க கேட்டுக்குக்கு மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றனர்  என்று கல்வி நிலையங்கள் புரிந்து கொண்டால் சரி! சாமியார் மடங்களுக்கு கோடிகள் புரண்ட போது கேடிகள் ஆகி விட்டது போல் கல்வி, வியாபாரம் ஆனதால் வீழ்ந்துள்ளதை வருத்தத்துடன் நாம் கண்கூடா காண்கின்றோம்!

5 comments:

  1. நல்ல சிந்தனை மற்றும் கருத்துக்கள் அடங்கிய பதிவு

    ReplyDelete
  2. Sathalakshmi Baskar · Subscribe · Works at House WhifeMay 10, 2012 7:13 am

    Sathalakshmi Baskar · Subscribe · Works at House Whife
    கல்விக்கு மதிப்பு இப்பிடி வந்து விட்டதே?காலம் செய்த கோலம்.உங்களின் ஆதங்கம் நியாயமானதே.ஒரு சிலர் விடும் தவறால் ஒட்டு மொத்த இனமே பாதிக்கிறது.
    Reply · Like · Follow Post · 9 hours a

    ReplyDelete
  3. Pottu Ammaan · Costumer at McDonald'sMay 10, 2012 7:14 am

    Pottu Ammaan · Costumer at McDonald's
    கலைவாணிகூட தன் பிள்ளையை பள்ளியில் சேர்க்க.
    கையில் உள்ள வீணையை விற்று கட்டணம் கட்டும்.
    கேவலமான நிலையில் உள்ளது,,, என்ன செய்வது அக்கா?
    கேடிகளிடம் கோடிகள் புழங்கும்போது.
    கேடுகளை சந்தித்தே ஆகவேண்டும்...
    விழிப்பு நிலையில் மக்கள் இல்லாதபோது!,!

    ReplyDelete
  4. Perachi Kannan · Msuniversity masscomm, tirunelveliMay 23, 2012 10:10 pm

    nalla pathivu jose.....

    ReplyDelete
  5. Sathalakshmi Baskar · Works at House WhifeMay 23, 2012 10:11 pm

    கல்விக்கு மதிப்பு இப்பிடி வந்து விட்டதே?காலம் செய்த கோலம்.உங்களின் ஆதங்கம் நியாயமானதே.ஒரு சிலர் விடும் தவறால் ஒட்டு மொத்த இனமே பாதிக்கிறது.

    ReplyDelete