12 May 2012

பூஞார்/பூவார்(Poovar) - இயற்கை சுற்றுலா


நாகர்கோயில் சென்ற நாங்கள் திடீர் பயணமாக  பூழியூர்(பூவார்) சென்றிருந்தோம்.   நாகர்கோயில் வழியாக கேரளா எல்கை களியாக்காவிளை தாண்டியதும் திருவனந்தபுரம் செல்லும் வழியில்  பூவார்(Poovar) வந்து விடுகின்றது.  ரோட்டில் இருந்து இறங்கி காயலை நோக்கி நடந்து செல்ல வேண்டும்  56 கிமீ நீளமுள்ள  நெய்யூர் நதி காயலுடன் கை கோர்த்து அரபிக்கடலில் கலக்கும் அழகிய இடம்  இது.

 மர வியாபாரத்திற்கு புகழ் பெற்ற இடமாகும். வழியெங்கும்  மரச்சாமான்கள் செய்யும் கடைகள் காணலாம். 1500 வருடம் முன்பு  இஸ்லாமியர்கள் குடியேறி வசிக்கும் பகுதி என்பது இன்னொரு சிறப்பாகும்.  திருவனந்தபுரத்தின் இருந்து 30 கிமீ தள்ளி தெக்கு மூலையில் அமைந்துள்ள பூவாரில் , கண்ணில் இடம் எல்லாம்  சிறிதும்  பெரிதுமாக கேரளா தேசிய மரமான தென்னை  மர அணிவகுப்பு தான். இந்த நீர் நிலை உள்ளிலும் தென்னை மரமாகத் தான் உள்ளது.   சுற்றுலா தேவைக்கு என பல ஆயிரம் தென்னை மரங்கள் வெட்டியுள்ளனர்.

செல்லும் வழியெங்கும் வீடு இருப்பதால் மக்கள் குளித்து கொண்டும் சிறுவர்கள் தண்ணீரில் பந்து   விளையாடிக் கொண்டும் நேரம் போக்குவதை  காணலாம்.  இன்னும் சில வயதான மனிதர்கள் நம்மூரில் மரத்தடியில் தூங்குவது போல் வள்ளத்தில் தூங்குகின்றனர்.  ஒரு மனிதர்  பாக்கை  கையால் உடைத்து மென்று கொண்டிருந்தார். இன்னும் சிலர் பொழுது போக்காக மீன் பிடித்து கொண்டிருந்தன்ர்.

மழைக்காடுகள் என்று அழைக்கும் மரங்கள் கூட்டத்திற்க்குள்ளாக அழைத்து சென்றார். வீடுகள் கரையில் உள்ளதால் வீட்டு கழிவு மீன் கழுவும் நீர் என சில இடங்களில் துர்நாற்றமாக தான் உள்ளது. ஆனால் நம் தலையை தொடும் செடி கொடிகள் ஊடாக படகில் பயணிப்பது ஒரு சுகமான அனுபவமே. வழியெங்கும் பெரிய பழ மரங்களில் காணப்ட்டது. என்ன வகை காய் என்ற போது இது விஷக்காய் சாப்பிட்டால் இறந்து விடுவோம் என்ற போது இது தான் இயற்கையின் சோதனையோ என்று தோன்றியது. கைக்கு எட்டியது  வாய்க்கு எட்வில்லை என்று சொல்வார்களே அது போல! 


படகு மெதுவாக நெய்யார் ஆறு வழியாக கடலை செற்றடைந்தது. அருமையான அழகு சொக்கவைக்கும் கடல். உணவு விடுதிகள், அருகில் இல்லை என்பதால் சுத்தமாக காணப்பட்டது. நாங்கள் சென்ற  தினம் அங்கு படம் பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.  மலையாளம் அல்லது தமிழ்ப்படம் அல்ல என்று மட்டும் தெரிந்தது. காதலர்கள் ஓடி வந்து கட்டிபிடிக்கும் காட்சியை எடுத்து கொண்டிருந்தனர். நடிப்பை சொல்லி கொடுக்கும் பெண் ரொம்ப ஆவேசமாக நடித்து காட்டி கொண்டிருந்தார். நாயகி அறுக்க கொண்டு போன ஆடு போல் நடித்து கொண்டிருந்தார். எங்கள் மகன்கள்  படகில் இருந்து இறங்கி சென்று கடல் அருகை சென்று அழகை ரசித்து வந்தனர்.  ஒரு பக்கம் நதியின் கொஞ்சும் நெருக்கத்தை உள் வாங்கும் கரை மறுபக்கம் கடல் அலையின் ஆக்கோராஷமான அடியை ஏற்று  வாங்கும்  காட்சி ஆச்சரியவும் அழகும் சேர்ந்து இருந்து.  இது  வாழ்க்கை தத்துவவும் கற்று தருகின்றது.  கரையில் இறங்கலாம் என்ற போது ஜட்டி மட்டும் அணிந்து குடிவெறியுடன் ஆட்டம் போடும்  இளம் கெட்ட கேரளா காளைகளை கண்டதும் அங்கு நிறைய நேரம் நிற்க மனம் இல்லாது படகை திருப்ப சொல்லி விட்டார் என்னவர். 

மறுபடியும் மழைக்காடுகள் ஆறு காயல் வழியாக வந்து கொண்டிருந்தோம். கேரளாவின் பக்தியும் கலை உணர்வும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்து நம்மை மெய் மறக்க செய்தது.  அழகாக காட்சி தரும் சிற்பங்கள், மிதக்கும் உணவகம், மிதக்கும் வீடு அழகிய சுற்றலா மாளிகைகள் காணும் இடமெல்லாம் தண்ணீர், தண்ணீருக்கு சுவர் என்பது போல் தென்னை மரம் என அழகை வர்ணிக்க கவிஞராக தான் பிறக்க வேண்டும். 20-30 அடி ஆழம் உள்ளதாக படகோட்டி கூறினார். ஒரு உயிர் கவசம் மட்டும்தான் தந்திருந்தனர்.  தேக்கடி நிகழ்வுகள் தெரிந்த படியால் பயமாக தான் இருந்தது. இருப்பினும் மக்கள் சுற்றுமுற்றும் இருப்பதை கண்ட போது தைரியத்தை வரவழைத்து கொண்டேன். எங்கள் இளைய மகன் அந்த உயிர் கவசத்தை அணிந்து கொண்டு தண்ணீரில் நீந்தி வரவா என்று எங்களை சோதனைக்கு உள்ளாக்கி கொண்டிருந்தான்.

திரும்பி வருகையில் இரும்பு, மரப் பாலங்களை அழகாக கட்டி கொண்டிருப்பதை கண்டோம்.  அதுவும்  ஒரு அழகாக தான் உள்ளது.

.இந்த காயலை சுற்றி வீடுகளாக உள்ளது. சிலர் சுற்றுலா பயணிகளை கண் வைத்து பெரிய பெரிய மாளிகைகள் கட்டி விட்டுள்ளனர். கேரளா ஆயுர்வேத மாளிகைகள் உள்ளது. பயணிகள் தங்க என மிதக்கும் குடிலுகள் அழகிய வீடுகள் உள்ளன.  நாங்கள் இவை எல்லாம் படகில் செல்லும்  போது   படகோட்டியிடம் பார்த்தும், கேட்டும் தெரிந்து கொண்டோம். அங்கு சென்று தங்கவேண்டும் என்றால் "பல்லுள்ளவன் தான் பட்டாணி சாப்பிட இயலும்" என்ற பழமொழியை எண்ணி சிரித்து கொள்ள வேண்டியது தான் .  6 பேர் பயணிக்கும் படகு சவாரிக்கு நம்மிடம் 750 ரூபாய் வசூலிக்கின்றனர்.  நாங்கள் பயனித்த படகு கைரளி என்ற நிறுவனத்தினுடையது. இதே போல் இந்த காயலோரமெங்கும் பல படகு நிறுவனங்கள் உண்டு. படகு ஓட்டும் நபர்கள் ஏழைகளாக தான் காட்சி தருகின்றனர். ஊதியம் கிடைப்பதாக சொன்னாலும் எவ்வளவு என்று சொல்ல எங்கள் படகோட்டியின் தன்மானம் விட்டு தரவில்லை. சிறந்த பன்பான, அமைதியான பழக்கவழக்கத்துடன்   நம் முகம் கோணாது சிறு புன்சிரிப்புடன் மென்மையான குரலில் நாம் கேட்கும் சந்தேகத்திற்க்கு பதில் தருகின்றார் படகோட்டி!.



ஒன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை. இறங்கும் நேரம் வந்து விட்டது. படகோட்டிக்கு அன்பளிப்பாக 25 ரூபாய் கொடுத்தால் வேண்டாம் என்று வாங்க மறுத்து விட்டார் நாங்கள் வற்புறுத்தவே வாங்கி கொண்டார்.  பாஞ்சாலக்குறிச்சியில் 10 ரூபாய் கேட்டு வாங்குவது தான் அப்போது நினைவிற்கு வந்தது. நம் எல்கைக்கு அருகிலுள்ள இந்த காயலில்  மாலை வரை செலவழித்து விட்டு திருவனந்த புரம் திரும்பினோம்.

எங்கள் இளைய மகன் தன்னை தண்ணீரில் விளையாட அனுமதிக்கவில்லை என்று கொதிக்கும் எண்ணையில் இட்ட வடை  போல் கோப கனலுடன் வந்து கொண்டிருந்தான்! உணவு வாங்கி கொடுத்து ஒரு சமரசம் செய்து விடலாம் என எத்தனித்து ஒரு உணவகத்திற்கு அழைத்து சென்றோம். மகனிடம் கோபம் தனிக்க மலையாள மொழியில் இனிமையாக பேசி கொண்டிருந்தார் உணவக பணியாளர். அப்போது உணவகத்தில் 'கோ' படத்திலுள்ள "என்னமோ ஏதோ என்ற"........தமிழ் சினிமா பாடல்கள் ஒலித்து கொண்டிருந்தது. ஒரு ஆப்பம் கடலைக் குழம்புடன்  6 ரூபாய்க்கு கிடைக்கின்றது. மகன்களுக்கு நம்ம ஊர் கொத்து பிரோட்டா தான் வேண்டும் என பிடிவாதமாக இருந்தனர். 75 ரூபாயாக இருந்தாலும் சுவையாகத்தான் இருந்தது. ஆனால் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு கைகழுகும் சில  நபர்கள் கக்குவது போல் துப்புவது தான் நாம் உண்டதும் வெளியில் வரும் போல் அருவருப்பாக இருந்தது.

மழையும் வந்து விட்டது. இனி நம் நெல்லையை நோக்கி பயணிக்க வேண்டியது தான்.   இப்படியாக இந்த வருடவும் கேரளா தலைநகரிடம் விடைபெற்று நெல்லை சீமை வந்தடைந்தோம் நடுநிசியில்!

5 comments:

  1. அழகான இடம்....படம் நன்றாக எடுத்துள்ளீர்கள்.....

    ReplyDelete
  2. Subi Narendran · Good Shepherd Convent KotehenaMay 13, 2012 3:47 pm

    ரம்யமான இயற்கைக் காட்சிகளோடு பயனுள்ள ஒரு பகிர்வு. உங்களோடு படகில் சவாரி செய்து நானும் பூவாரின் இயற்கையை உள்வாங்கியது போல உணர்கிறேன். அதுதான் உங்கள் இலகு எழுத்தின் மகிமை. நன்றி தங்கையே. நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  3. படங்களும் விளக்கமும் மிக அருமை. தெரியாத பல சுற்றலா தளங்களை உங்களின் பதிவின் மூலம் அறியமுடிகிறது. இது போன்ற யாரும் அறியாத பல இடங்கலுக்கு சென்று அதை பற்றி எழுதி நீங்கள் புத்தகமாக போடலாம். சொல்லும் விஷயங்கள் மிக தெளிவாக உங்கள் எழுத்தின் மூலம் புரிய முடிகிறது, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. It's very nice and pictures. This year i was travelling from Trivandrum airport to Nellai the driver was mentioned about the place. But very detailed.

    ReplyDelete
  5. அருமையான பதிவு, சில நாட்கள் அந்த வழியாக கடந்து சென்று உள்ளேன் காயலில் செல்லவில்;லை அந்த அனுபவத்தை கொடுதுவிடெர்கள்

    ReplyDelete