12 Oct 2012

விமர்சனத்துடன் Chidambaram Kasiviswanathan சீனாஐயா!


 நெல்லை வலைப்பதிவர் சந்திப்பில் சீனா ஐயாவை முதல் முதலாக சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. தன் ஆளுமை, இயல்பான அன்பான குணத்தால் அனைவரையும் அரவணைக்கும் பண்பு கொண்டவர் ஐயா. என் வலைப்பதிவை தன்னுடைய  வலைச்சரம் தளம் வழியாக பல அறிய நேயர்கள் பக்கம் திருப்பியதில் பெரும் பங்கு வகித்தவர் ஐயா.  முதல் புத்தகம் வெளியாகி உள்ளது என அறிந்ததும் வாசித்து தன் கருத்தை அருளியது மட்டுமல்லாது தன் அன்பு மனைவி கையிலும் என் புத்தகம் கிடைக்க செய்து அன்பு சகோதரியில் கருத்தையும் பகிர்ந்தமைக்கு என் நன்றியை தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றேன். தன்னுடைய வேலைப்பழு மத்தியிலும் சீனா ஐயா வழியாக என் புத்தகம் விமர்சனம் செய்யப்பட்டதில் பெரிதும் பெருமை கொள்கின்றேன். தங்கள் ஆசிர்வாதம் வாழ்த்துக்களுடன் வாசகர்களை சென்று அடைவதில் மகிழ்ச்சி கொள்கின்றேன்.

அன்பின் ஜோஸபின் பாபா 

நான் தேடும் வெளிச்சங்கள் புத்தகம் 

அத்தனை கதைகளும் அருமை - படித்து மகிழ்ந்தோம். 

எனது துணைவி செல்வி ஷங்கர் கருத்துரை எழுதி உள்ளார். அது கீழே கொடுக்கப் பட்டுள்ளது

நான் தேடும் வெளிச்சங்கள் – ஜெ.பி.ஜோஸபின் பாபா
ஒரு பார்வை – செல்வி ஷங்கர்




முதலில் நூலாசிரியரின் நினைவாற்றல் வியக்கத் தக்கதாய் உள்ளது. எத்தனை பேர் !  எவ்வளவு நண்பர்கள் ! எவ்வளவு உறவினர்கள் ! பழகிய இடங்கள் ! பணிகளுக்கு இடையே பார்த்தவர்கள் ! பழக்கப் பட்டவர்கள் ! சிறு வயதில் இருந்தே ஓடி ஆடி விளையாடி படித்து பழகி சண்டையிட்டு பார்வைக் கண்ணோட்டத்தில் கருத்தினை ஊன்றி கதையாய்ப் படைத்திருப்பது படிக்கும் போது வியப்பைத் தருகிறது.   

கால ஓட்டத்திற்கு ஏற்ப உண்ட உணவு,  உடுத்திய உடை, பழகிய நட்பு, பார்த்த இடம், படிப்படியாய் வளர்ந்த வளர்ச்சி எல்லாமே கதைகளில் ஊடுறுவி இருப்பது ஒரு கருத்தோவியம் போல் உள்ளது. ஒற்றை மரமென்று உறவையும், என்னுயிர்த் தோழன் என்று பள்ளியில் படித்த காலத்தையும், அக்காலத்திற்கே உரிய கருத்தோட்டங்களையும், அன்றைய பாடமும், படிப்பும், ஆசிரியரும் மாணவரும், உரையாடி, உறவாடிய முறையையும், சூழ்நிலைக்கேற்ப விளக்கி உள்ளமை சிந்திக்கத் தக்கது.

வளர்ந்த பின் கல்லூரிப் படைப்பையும், அக்காலகட்ட விடுதி வாழ்க்கையையும், அப்போதைய மாணவப் பருவத்து உணர்வுகளையும விடாமல் விளக்கி விளையாடி இருக்கிறார். இந்த முதல் ஐந்து கதைகளையும் படித்துக் கொண்டு வரும் போது இந்த கால் கட்டத்தில் இருந்து கொண்டு எப்படி இருபது முப்பது ஆண்டுகட்கு முந்தைய இளம் பருவத்தின் நிகழ்வுகளைக் கொண்டு வந்தார் என்பது வியப்பாய் இருக்கிறது..

 கதைகளைப் படிக்கின்ற போது சமுதாயம் உணர்ந்தது போலவே நிகழ்வாக்கி எழுத்துகள் செல்வது ஆசிரியரின் ச்முதாய்ப் பார்வையைக் காட்டுகிறது.

 கருத்து நடையும் எழுத்து நடையும் மொழி நடையும் உணர்வோட்டச் சிந்தனையும் சமுதாயக் கருத்தும் இயறகையும் முட்டி மோதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.. உண்மையில் ஒரு படைப்பாய் ஒரு நூல் உருவெடுக்க வேண்டுமென்றால் நிறைய உழைப்பும் சிந்தனையும் கருத்தும் இருக்க வேண்டும் என்பதில் ஆசிரியர் நிறையவே பாடு பட்டிருக்கிறார்.. இது பாராட்டத் தக்க படைப்பும் உழைப்பும் ஆகும்.

----------------------------------------------------------10.12.2012------
செல்வி ஷங்கர் – வலைச்சரம் சீனாவின் துணைவி. 

நல்வாழ்த்துகள் ஜோஸ்பின் பாபா 
நட்புடன் சீனாமுகநூல் பக்கம்!

1 comment:

  1. அன்பின் ஜோஸபின் பாபா - எனது துணவியார் எழுதிய புத்தக விமர்சனம் பதிவாக வெளியிட்டமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete