9 Feb 2014

உலக திருமண நாள்-Feb 9



 உலக திருமண நாள்-Feb 9; திருமண பந்ததை உறுதிப்படுத்த அதன் தேவையை உணர, பலப்படுத்த இந்நாளை சிறப்பாக கொண்டாட வேண்டியது அவசியமாக உள்ளது. கடவுள் செய்த முதல் பணியே இரு மனிதர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கி மகிழ்ந்து வாழச் வழி செய்தது தான்.

திருமணம் என்ற பந்தத்தை நிலை நாட்ட எல்லா மதங்களும் போட்டி போட்டு செயலாற்றுகின்றது. துறவறம் போன்றவை மனிதனால் உருவாக்க பட்டிருப்பினும் திருமணம் மட்டுமே இயற்கையால்/ கடவுளால் நிறுவப்பட்டது. இரு வெவ்வேறு மனிதரின் எல்லா நிலையிலுமான வகையிலுமான சங்கமாக பார்க்கப்படுகின்றது. 
இந்திய காலாச்சார சூழலில் திருமணம் என்ற நிகழ்ச்சிக்கு பெரும் பணம் செலவழித்து நடத்தினால் கூட; அதை சிறப்பாக நடத்தி செல்ல தகுந்த வழிகாட்டுதல் இல்லை என்பதே உண்மை. பல மனிதர்கள் காதல் அளவுக்கு திருமண வாழ்க்கையை ரசிக்காது போனதற்கு காரணவும் இதுவே. திருமணம் என்பதை ஒருவர் இன்னொருவரை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள துணியும் போது உறவின் சுவாரசியம் மறைந்து போகிறது. காதலில் இருக்கும் ஈர்ப்பும் சுதந்திரவும் திருமணத்தில் பறி போகும் போது மனிதன் திருமணம் என்ற பந்ததை பல வகையாக குறை கூறி அதில் இருந்து தப்பி ஓடப் பார்க்கிறான்.

ஆனால் சரியாக புரிந்து, அணுகுபவர்களுக்கு இது போன்ற ஒரு மகிழ்ச்சியாக சுதந்திரமான இயல்பான, பாதுகாப்பான வாழ்க்கை முறை இல்லை என்றே கூற வேண்டும். காலங்கள் மாறியிருப்பினும் ஆண்-பெண் வில் பாரிய மாற்றமில்லை. குஷ்வந்த் சிங் சொல்லியுள்ளார் வீட்டிலுள்ள மாமியாருக்கு எப்போது பேரப்பிள்ளை தேவையோ அப்போது தான் மகனை மனைவி பக்கம் அணுக அனுமதிப்பார்களாம். இன்று நவ நாகரீக வாழ்க்கையில் அவ்விதமான அடிமத்த பிடியில் இருந்து தப்பித்து நகரத்தில் தனிக்குடித்தனம் நடத்தும் குடும்பத்திலும் மனைவியை பற்றி கணவர் கூறுகின்றார் “சினிமாவுக்கு அழைத்தால் கூட வருவதில்லையாம். காரணம் தினம் வேலைக்கு போகும் பெண் அந்த ஒரு நாள் அடுத்த வார அலுவல் வேலைக்காக தன்னை தயார்ப்படுத்தும் போது தங்கள் திருமண உறவை மறந்து போகின்றனர்.

இன்று வேலை போன்ற காரணங்களால் பிரிந்திருக்க வேண்டிய சூழலில் வெறும் தொலைபேசிதான்  திருமண பந்ததை காத்து வருகின்றது. இவையும் முன்னேற்றம் என்ற பெயரில் நுழைந்த பேராபத்து தான். “தனி நபர் முன்னேற்றம்” என்ற பெயரில் திருமணத்தை பற்றிய /கணவன் மனைவி உறவை பற்றி தவறான கீழ்த்தரமான சிந்தனை இப்பந்தத்திற்கு மேலும் அச்சுறுத்தல் ஆக மாறுகின்றது; பகடி என்ற பெயரில் பல தவறான கருத்தை வளர்த்து வைத்துள்ளனர். 
ஆண் பெண் சமம், போன்ற கருத்தியலும் திருமண பந்ததின் சுவையை குறைக்கின்றது. வெற்றிகரமான திருமண உறவை நாடுபவர்கள் நானும் நீயும் சமம் என்பதை நிலைநாட்ட முயலாது இருவரும் வேறுபாட்டில் தங்களை  சமரசப்படுத்தி கொள்ளும் வாழ்க்கையாக காண வேண்டும். சிலரோ, எளிதாக பாலியல் உறவை வைத்து கொள்ளும் இயக்கமாகவும் காண்கின்றனர். வெறும் ஊதியம் பெறும் அலுவலகத்தில் மற்று மனிதர்களுடன் அனுசரித்து போக பழகிய மனிதர்கள் ஒரே வீட்டில் வசிக்கும் இருவர்ன் ஆரோக்கியமான உறவை பற்றி எண்ணி பார்ப்பதில்லை. அன்பு பாசம் என்பதை அடித்தளமாக எடுத்து கொள்ளும் போது அங்கு ஆள, ஆளப்பட வாய்ப்பில்லை.



என்னதான் வேலை என்றாலும் கணவன் மனைவி தங்களுக்கு என சில மணி நேரங்களை நிச்சயமாக ஒதுக்க வேண்டும். அங்கு தங்கள் பெற்றோருக்கோ ஏன் அன்பு நமது பிள்ளைகளுக்கோ கூட இடம் இல்லை. அந்த நேரம் என்பது  நடைநேரமாக இருக்கலாம், சாப்பாட்டு நேரமாக இருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட நேரம் திறந்த உரையாடலுக்கு தேவை. ஆனால் பல வீடுகளில் பெண்களாகட்டும் பக்கத்து வீட்டு பெண்ணிடம் உறவினர்களிடம் உரையாடுவதில் காட்டும் அக்கறை, ஆண்களோ நட்பில் மயங்கி கிடக்கும் சூழலில் தங்கள் குடும்ப உறவை மறந்து போகின்றனர்.

பல திருமணம் பந்தம் பணத்தாலும் வசதி வாய்ப்பு எண்ணத்தாலும் உருவாகுவதால்; வேலை, அழகு, பணம் கவுரவம் நுழையும் போது உண்மையான மகிழ்ச்சி கிடைக்கபெறாது  இவ்வுறவின் சாரம் அற்று போகின்றது. பல கணவர்கள் தங்கள் மனைவியை பற்றி புறம் பேசுவதும் பெண்களோ தன்னை சார்ந்திருப்பவர்களிடம் கணவரை குறை கூறி தங்களை தியாக பிம்பங்களாக பறைசாற்றவதையும்  சலித்து கொள்வதையும் தவிர்த்து கொள்ள வேண்டும்.
பெண் எப்போதும் ஆணிடம் இருந்து  கருதல், புரிதல், மதிப்பு, ஆராதனையை எதிர் பார்க்கின்றாள். அதுபோலவே ஆண் பெண்ணிடம் இருந்து நம்பிக்கை, ஏற்று கொள்ளுதல், பாராட்டுதல், உற்சாகப்படுத்துதல் எதிர் பார்க்கின்றான். இந்த பந்ததில் நீ கொடுத்ததை நான் திரும்பி தருவேன், நீ இப்படி என்றால் நான் அப்படி என்று இல்லாது இருவரும் போட்டி போட்டு கொண்டு அன்பை காதலை கொடுக்கவும் பெறவும் கடமைப்பட்டுள்ளனர்.
தற்கால பெண்கள் அலுவல ஆளுமையை வீட்டில் புகுத்தி மன அழுத்ததில் உள்ளாகாது குடும்ப வாழ்க்கையும் சமூக/அலுவலக வாழ்க்கையும் பிரித்து பார்க்க பழக வேண்டும். பெண்கள், கணவரின் அருகாமையில் உணரும் சுதந்திரம் மகிழ்ச்சி, நம்பிக்கை வேறு எங்கும் உணர இயலாது.திருமணம் சொர்க்கத்திலல்ல நம் எண்ணத்தில் நம் மனதில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

1 comment: