6 Apr 2014

பயமுறுத்தும் பல் மருத்துவ மனை நினைவுகள்!

பல் ஆஸ்பத்திரி என்றதும் அம்மாவுடன் செல்லும் எங்க ஊர் பல் மருத்துவமனை தான் நினைவிற்கு வருகின்றது. அந்த மருத்துவர் நாலடி உயரம் உள்ள ஒரு மலையாளி! நோயாளியை பார்க்கும் பார்வையிலும் கேட்கும் கேள்வியிலும் நக்கல் துள்ளி விளையாடும். மருத்துவரை பற்றி பல கதைகள் நடைமாடியது. அதில் ஒன்று மருத்துவர் ஏழையாம் பணக்கார வீட்டு பெண்னை காதலித்து மணம் முடித்தாராம். அவர் மனைவி குடும்பத்தார் மருத்துவருக்கு தன் மகளுடன், வீடு, மருத்துவ மனையும் சேர்த்து  கொடுத்தார்களாம். நம்பாமலும் இருக்க இயலவில்லை. மருத்துவரை விட அவர் மனைவி இரண்டு அடி அவரை விட உயரமாகவே இருந்தார். அந்த சீமாட்டி எங்கள் ஊரில் யாருடன் நட்பு கொண்டதோ பேசினதோ கண்டதில்லை. அனால் அமைதியான அம்மையார்.  ஆனால் மருத்துவரை சுற்றி எப்போது எங்கள் ஊர் ”மைனர் குஞ்சுகள்” பேசி கைதட்டி சிரித்து கொண்டு நிற்பார்கள். 


இன்னும் சிலர் மருத்துவரை பற்றி கூறினார்கள் அவர் கடைசி வருட தேற்வில் தோற்றவராம். ஆனால் இந்த கதையும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. எங்கள் ஊரில் அன்று இருந்த மருத்துவர்கள் கேரளா நாட்டு மற்றும் ஆயுர்வேத வைத்தியர்களே. சில மந்திரவாதி வைத்தயர்களும் உண்டு. ஆனால் ஆங்கில மருத்துவம் என்றால் தேற்வில் ஜெயிக்காதவர்கள் தான் மருத்துவமனை நடத்துவார்கள்.

ஒன்று கேள்வி கேட்க தகுந்த அறிவாளியாட்கள் இல்லை அல்லது வருவதில்லை. கொஞ்சம் காசுள்ள மலையாளிகள் குட்டிக்கானம் கடந்து காஞ்சிரபள்ளி போனால் தமிழர்கள் கம்பம் போய் விடுவார்கள்.
அம்மா கடைசி நேரம் வலி உயிர் போகும் நேரம் மருத்துவ மனை செல்வதால் எங்கள் வீட்டில் இருந்து ஒரு தெருவு தள்ளி இருக்கும் இந்த மருத்துவரை தேடி செல்வார். அம்மாவுக்கு துணைக்கு நானும் செல்வேன். அந்த கட்டிடம் மரத்தாலான ஒரு அழகான பழைய கட்டிடம்.மருத்துவர் குடும்பம் அருத்துவமனை அடித்தளத்தில் வசித்து வந்தது. அந்த ஆள் மலையாளத்தில் கேலியாக அம்மாவிடம் கேட்க பல்லை ஒரு கையால் அமத்தி கொண்டும் வரும் கோவத்தை காட்டாது பதில் சொல்வது நினைவில் உள்ளது. .



அந்தக்காலம் ரூட்கனால் போன்ற சிகித்சை முறை இல்லாததால் பல்லை ஒட்டி விடுவார்கள் அல்லது பிடுங்கி விடுவார்கள். ஒட்டுவதை விட பிடுங்குவது லாபம் என்பதால் எங்க ஊர் மருத்துவர் பல்லை பிடுங்கத்தான் விரும்புவார். மயக்க ஊசி போடுவது கூட பல நேரம்  அவருக்கு வழக்கம் இல்லை. முகத்தை கோரமாக வைத்து கொண்டு ”துறக்கு வாயே” என்று கட்டளை இடுவார். அடுத்து கட்டிங் பிளையர் போன்ற ஆயுதம் வைத்து கொண்டு ஒரே பிடுங்கு தான்….. 

இதனாலே பல் மருத்துவ மனை என்றாலே எனக்கு கொள்ளை பயம்!!!  ஆனால் நான் நேற்று சென்ற மருத்துவ மனை நெல்லையிலுள்ள நவீன பல் மருத்துவ மனையாம், ஆனால் தண்ணீர் தான் தானியங்கி இயந்திரம் வழியாக வர வில்லை. ஒரு சிறுபெண் தண்ணீரை தாள் கப்பில் எடுத்து ஊற்றி கொண்டிருந்தார்.

0 Comments:

Post a Comment