27 Sept 2015

போட்டி மனோபாவம் தோல்வியே

வெற்றி என்பது மகிழ்ச்சி, தன்ன்னம்பிக்கை கொடுப்பதை விடுத்து ஒரு மனிதனை தற் பெருமை, "தான்" என்ற அகம்பாவம் கொள்ளவைப்பது  அல்லது  "தான் மட்டுமே" சிறந்தவர் என்ற மனநிலைக்கு ஆட்படுத்தினால்  அது ஒரு மாபெரும் தோல்வி நிலை ஆகும்.

ஒரு மனித பிறப்பின் அடிப்படை கொள்கை , நோக்கம் என்பது அகத்தை தேடி அறத்தை எட்டுவதாகும்., இன்றைய பல போட்டிகள் மனிதர்களை வெற்றி களிப்பில் அறத்தை மறப்பவர்களாகவும்,  வெற்றி என்பதை மற்றவர்களை கேலிக்குள்ளாக்கும் செயலுக்கு ஆக்கமாக அமைக்கின்றனர்.  ஒரு ஆசிரியர் வகுப்பில் முதல் இடத்தை பிடிக்கும் மாணவனை புகழும் போது,  அவன் சராசரி மாணவர்கள் உலகில் இருந்து தனித்து பயணித்து மற்று மாணவர்களை கீழ்த்தரமாக நோக்கும் மனநிலையை அடைகின்றான். வெற்றியை தவற விட்டவனும் தனித்துவமான தன்னை எவ்வகையிலும் தன்னுடன் ஒப்பிட்டு பார்க்க இயலாத இன்னொருவனுடன் தன்னை ஒப்பிட்டு பார்த்து தாழ்வு மனநிலைக்கு  எட்டுகின்றான்.


வெற்றி என்பது தோல்வியை மூடி மறைக்கும் முயற்சி என்று ஓர் அறிஞர் கூறுகின்றார். வெற்றி என்பதை சாற்றோர்களால் தன்னை தானே அழித்து கொள்ளும் ஓர் நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது. இன்று பல பரீட்சை, விளையாட்டு,கலை போட்டிகளில் வெற்றி களிப்பில் திளைத்தைவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரும் தோல்வியை தழுவியவர்களாகவும், மனநிலை பிளர்வு கொண்டவர்களாகவும் சில பொழுது தற்கொலை ஊடாக தன்னை மாய்த்து கொண்டவர்களாகவும்  இருக்கின்றார்கள். 

ஆனால் மற்று சிலரோ  இந்த வெற்றி-மாய உலகில் தன்னை விடுதல் ஆக்கி கொள்ளவே தனிமையை தேடும் மனநிலையையும் அடைகின்றனர்.  வெற்றிக்கான போட்டி பல மனிதர்களை அழிவுக்கு கொண்டு சென்றுள்ளது. பைபிள் கதை வழியாக  நாம் அறிவது  கடவுளிடம் போட்டி போட முதல் மனிதர்களாம் ஆதம் ஏவாள் துணிந்த போது பெரும் துயரை-தோல்வியை சந்தித்தனர்.  முதல் சகோதரன் காயேன் தன் சகோதரனிடம் போட்டி கொண்ட போது அவனை கொலை  செய்யவும் தயங்கவில்லை. ஜேக்கப் என்ற சகோதரன் ஏசா என்ற சகோதரனிடம் மோசமான வழியூடாக போட்டி போட்டு வெற்ற் கொள்ள முயன்ற போது பல  வருடங்கள்  அடிமையாக  தன் மாமனார் வீட்டில் அகப்படுகின்றான். 

 மகாபாரத கதையை எடுத்து கொண்டாலும் தன் சகோதர்களான பாண்டவர்களிடம் போட்டி இட்ட கவுரவர்கள் ஒரு போதும் நிம்மதியாக வாழவில்லை. போட்டி அழிவை எட்டுகின்றனர்.மற்றவர்களையும் அழிக்கின்றது.

Image result for trophy images ஒவ்வொரு ஆசிரியனும் தங்கள் மாணவர்களை போட்டியாளர்களாக உருவாக்குவதை விட வெற்றியாளர்களாக உருவாக்கவேண்டும். வெற்றி என்பது நிறைய பணம் ஈட்டுவது, அதிகாரம் பெறுவது என்ற உலக செல்வங்கள் என்பதை  விட அழியாத உள-உள்ள நலனுடன் மனத்தூய்மை கொண்டு  அமைதியுடன் வாழ்வதாகும் என்று உணர வைக்க வேண்டும். வாழ்க்கையின் க்‌ஷணத்தில் வாழாது பிற்கால- முற்காலத்தை எண்ணி எண்ணி வதைப்படாது வாழ  புதிய தலைமுறைக்கு கற்று கொடுக்க வேண்டியுள்ளது.

சமீபத்தில் நான் கண்ட சில காட்சிகள் என்னை இந்த புதிய தலைமுறையை பற்றி எண்ணி துண்புற செய்தது. இரண்டாம் இடத்தில் வரும் குழு தன்னால் முதல் இடத்தில் வர இயலவில்லை என்ற துயரில் தன் இரண்டாம் நிலையை எண்ணி மகிழ்ச்சி அடையாது நிராசையாக திரும்பியது.  மூன்றாம் நிலையை அடைந்தவர்களோ தீர்ப்பை மாற்றி எழுது என்ற பிடிவாதத்தில் தன்னை முழுதுமாக புரக்கணித்து  வெறுப்பு, கவலை,எதிர்ப்பு மனநிலையில் பிரிந்தனர். இந்த மூன்று நிலையிலும் எட்டாதவர்கள் தான் பங்கு பெற்றோம் தன்னால் இயன்ற அளவு போராடினோம் என்ற மனநிலையில் நிம்மதியாக  மகிழ்ச்சியாக  இருந்தனர்.

இந்த வாழ்க்கையை ஆழமாக நோக்கினால் எது வெற்றி எது தோல்வி? மகிழ்ச்சியாக நாம் இருப்பதே வெற்றி. வெற்றிக்காக சரியான வழியில் பயணித்து அந்த வெற்றியை சூடிக்கொள்வது தான் மாபெரும் வெற்றி. அசோக சக்கரவர்த்தி எதை வெற்றியாக கண்டான் தான் வெற்றி என நினைத்து பல மக்களை கொன்று அழித்து கைபற்றிய நாட்டை துறந்ததையே வெற்றியாக கண்டான். 

நம் புதிய தலைமுறையின் மனோபாவத்தை கெடுப்பதில் அவர்கள் கற்கும் கல்வி சூழல், பெற்றோர் வளர்ப்பு முறை இந்த சமூக நிலைபாடுகள் பெரிதும் காரணமாகின்றது. இன்று பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மகிழ்ச்சியாக கற்று வர அனுப்பதில்லை எல்லோரையும் மிஞ்சி முதல் இடத்தில் வரவேண்டும் என்ற வெறியையே ஊட்டி வளர்க்கின்றனர். ஒரு நிலையில் இந்த தலைமுறை தான் நினைத்தை அந்த இடத்தை எட்ட இயலாது வரும் போது பெரும் கட்டிடங்களின் முகப்பில் இருந்தும், ஓடும் இரயில் முன் பாய்ந்தும் தங்கள் வாழ்க்கையை முடித்து கொள்கின்றது. ஒரு தாய் பெருமிதத்துடன் கூறினார் "என் மக நினைத்ததை வெறியாக பின்தொடர்ந்து கண்டடைந்து விடுவாள்" என்று. ஆனால் மகள் பின் பற்றும் வழியை பற்றி தாய் பேதையாகவே இருந்தார். 

இன்றைய தலைமுறையின் சமூக வாழ்க்கை தனிநபர் வாழ்க்கை போட்டி என்ற மனநிலையின் பிடியில் சிக்குண்டு நிலைதடுமாறுகின்றது. வாழ்க்கை தன் நிலையில் தன் போக்கில் நிர்ணயிக்காது தான் வாழும் அடுத்தவர்  தரும் அளவுகோலில் அளந்து அதன் பிடியில் உழலுகின்றனர். 

தூய உள்ளத்தின் நிலையே படைப்பாற்றல்!   இன்றைய நிலையில் படைப்பாற்றல் பெரிதும் குறைந்து வருவதின் காரணமும் இது போன்ற  மனநிலை தான். 'தான் வெற்றி வாகை சூடவில்லை', என்றால் என்னை சுற்றியுள்ள மனிதர்கள் என்னை ஏமாற்றி விட்டனர், இந்த இயக்கமே சரி இல்லை என்ற மனநிலையை விடுத்து; தான் எவ்வாறு அடுத்த நிலைக்கு எட்ட இயலும் என்ற நேர்மறை எண்ணத்தை விடுத்து ;தன்னை ஒடுக்கும் தன்னை அழிக்கும் மனநிலைக்கு எட்டுகின்றனர். இவர்களது இது போன்ற மனநிலைக்கு சில மனபிளர்வு கொண்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் நலம்விரும்பிகள் காரணமாகின்றனர். தன்னை அறிந்து தன்னை சுயபரிசோதனை செய்து தானாக முடிவெடுக்கும் நிலையை எட்டும் வரை இன்றைய இளம் தலைமுறை அடிமைகள் தான். 


6 Sept 2015

ஒரு கொலையும் அதன் பிண்ணனியும்

Indrani Mukherjee. (Photo: Twitter)நாட்டின் வறுமை, நலம் சார்ந்து பல செய்திகள் மக்களுக்கு கொண்டு சேர்க்க இருக்க; ஊடகம் இந்திராணி-போரா கொலை வழக்கிற்கு கொடுக்கும் முக்கியத்துவம்  பலரை  கோபம் கொள்ள வைக்கும்  வேளையில் ஒரு நாட்டின், சமூகத்தின் அடிப்படை குடும்பம் என்பதால் குடும்பத்தில் நிகழும் சம்பவங்கள், உறவு சில்லல்கள்  பல பொழுதும் பல குற்றங்களுக்கு காரணமாகின்றது  அரசு கொலைகளை தடுக்க பெரிய பெரிய திட்டங்கள் தீட்டும் போது  குடும்பங்களை நெறிப்படுத்த சில முயற்சிகள் எடுக்க தேவையாக உள்ளது என்றே  இச்சம்பவங்கள்  உணர்த்துகின்றன.  

கடந்த தலைமுறையின் செயல்பாடுகளை ஏதோ ஒரு வகையில் குடும்பங்கள் வழி நடத்தியிருந்தது, நெறிப்படுத்தியிருந்தது, கட்டுப்படுத்தியிருந்தது. உலகலாவியல், விவசாயம், நவீய மக்கள் வேலை, பிழைப்பு என குடும்ப உறவுகளை விட்டு தனியாக வாழும் சூழலில் குடும்பத்தின் அமைப்பு  அதன் தாக்கம் கெள்விக் குறியாக மாறுகின்றது.

சமூக வலைத்தளத்தில், ஊடகங்களில் எவ்விதமெல்லாம் இந்திரா முகர்ஜியை அவமதிக்க வேண்டுமோ; அவ்வளவு செய்திகள் வந்து விட்டது. அவருக்கு பல கணவர்கள், பண ஆசை கொண்டவர் என பல பல குற்றச்சாடுகளுக்கு மத்தியில் அவரை பற்றி கொஞ்சம் கருத்தாக ஆராயும் போது தன் குடும்பத்தில் சொந்த  தாயின் கணவராலே அல்லது தனது சித்தாப்பா மூலமே பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிய பெண்களின் பிரதி நிதியாகவும் தெரிகிறார்.

Photo of Indrani's parents - Upen and Durga Rani Bora - three years before Mikhail Bora came back to live with them..  அவர் மகள் ஷீனா 87ல் பிறந்துள்ளதாக அவர் முதல்  பாட்னர் என குறிப்பிடும் தாஸ் கூறுகின்றார்.  1989 என பள்ளி சாற்றிதழில் பதியப்பட்டுள்ளது.  இவர்  இந்திராணி உடன் இந்திராணியின் பெற்றோருடனே  86 முதல் 89 ஆம் ஆண்டுவரை வசித்திருந்ததாகவும் கூறியுள்ளார். அப்போது அவர் கல்லூரி படிப்பில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.  ஆகையால் அந்த நபருக்கு 19 முதல் 21 வயது இருந்திருக்க வேண்டும்.  இந்தாராணியின் பிறப்பு 1972 என்று சொல்லப்பட்டுள்ளதால் அந்நேரம் இந்திராணிக்கு 14 முதல் 16 வயது தான் இருந்திருக்க வேண்டும். அவர் பள்ளிப் படிப்பை முடித்து உயர் பள்ளிப்ப டிப்பிற்கு அல்லது ஜூனியர் கல்லூரியை எட்டியிருக்கவே இயலும். 

indrani-family tree-update
தற்போது நவீனத்துவத்தின் அடையாளமாக லிவிங் டுகதர் வாழ்க்கையை  பற்றி பேசிக்கொண்டிருக்கும் வேளையில். இந்திராணிக்கு, அவர் பெற்றோர் 1986 காலயளவிலலிது போன்ற சூழலை அமைத்து கொடுத்துள்ளனர்.  பெண் குழந்தைகளுக்கு திருமண வயது 18 என்றிருக்க ஒரு குழந்தையான இந்திராணி பெற்றோராலே மோசமான வாழ்க்கை சூழலுக்கு இட்டு செல்லப்பட்டுள்ளார்.  இந்திராணியின் அம்மா தன் கணவர் ஓடிப்போன நிலையில் தன் கணவர் தம்பியுடன் வாழ்ந்துள்ளார். அந்நிலையில் தன் மகளை சரியான முறையில் கவனிக்காத வளர்க்காத;  பாசப்பரிவுடனோ நடத்தாது தன் சுகம் மட்டுமே எதிர் நோக்கிய தாயாகத்தான் இருந்திருக்க கூடும் இந்திராணியின் கூற்றை எடுத்து கொண்டால்.


இந்திராணி வீட்டில் ஒன்றாவது கணவராக /பாட்னராக வாழ்ந்த தாஸ்;  சமூக அங்கீகாரவும் பெறாத சூழலில்  குறிப்பிட்ட வேலைவாய்ப்பு  வருமானம் கூட அற்ற நிலையில் ஒரு மாணவராக இருக்கும் பருவத்தில் இரண்டு குழந்தைகளை இந்திராணிக்கு கொடுத்துள்ளார். இவர் இந்திராணி பெற்றோருக்கு எடுபிடியாகத்தான் இருந்திருக்க வேண்டும். சட்டப்படி வயதுக்கு வராத பெண்ணுக்கு இரண்டு குழந்தைகளை கொடுத்த சித்தார்த்த தாஸும் தண்டிக்கப்பட வேண்டியவரே.


இந்த  சூழலை இந்திராணியின் வளர்ப்பு தகப்பனார், தனக்கு சாதகமாகவும் பயண்படுத்தி இருக்க பெரும் வாய்ப்பு உண்டு. இந்திராணி கூற்றுப்படி கூட ஷீனா என் மகளும் என் தங்கையும் தான் என்று கூறியுள்ளார். இந்திராணி தாயார் பெரும் செல்வ செழிப்புள்ள குடும்பத்தை சேர்ந்தவராக இருந்துள்ளார் என தகவவல்கள் தெரிவிக்கின்றன, இருந்தும் தன் பதின்ம வயது மகளுக்கு பாதுகாவலராக இருக்க தவறி உள்ளார்.  அவ்வகையில் அவரும் தண்டிக்கப்பட வேண்டியவரே. மேலும் இந்திராணிக்கு பிறந்த பிள்ளைகளுக்கு தகப்பன் தாய் இடத்தில் தங்கள் பெயர்களை பதிந்து அரசையும் ஏமாற்றியுள்ளனர் இந்திரா முகர்ஜியின் பெற்றோர்..


இந்நிலையில் இந்திராணி இரு பிள்ளைகளையும் தன் தாய் தந்தையிடம் விட்டு விட்டு ஊரை விட்டே ஓடி வந்தவர்    கல்வி அறிவு, பேச்சு வல்லமை, அதீத துணிவு  இருந்திருந்தால் மேலும் கல்வி கற்று . குறிப்பிட்ட நாட்களுக்குள் நல்ல வேலைக்கு வருகின்றார்.  93 ல் அப்போது 21 வயது இருந்திருக்க வேண்டும்      ஒருவரை திருமணம் செய்துள்ளார். 1997ல் மகள் பிறக்கின்றார். மகளுக்கு 5 வயது இருக்கும் நிலையில் பெரும் பணக்காரரரை;  மூன்றாவதாக  மணம் புரிகின்றார்.  ஊடகங்கள் புகழாரவம் சூடி பெரும் சமூக அந்தஸ்துடன் வலம் வந்தவர் தனது முதல் இரண்டு பிள்ளைகளை தன்னுடன் இணைத்து கொள்ளும் சூழலில், சிக்கல்கள் வர ஆரம்பிக்கின்றது. 


இந்திராணியின் இரண்டாவது கணவரால் பிறந்த மகள்; தன் தாய் பாசமுள்ளவர் என்றே கூறியுள்ளார். ஆனால் இந்திராணி தனது பதின்ம வயதில் பிறந்த குழந்தைகளை தன் பிள்ளைகளகாவே ஏற்று கொள்ள இயலாத மனநிலையில் தான் இருந்திருக்க வேண்டும்.

ஒருவரின் ஆளுமை; குழந்தைப்பருவத்தில் தான் நிர்ணயிக்கும் படுகின்றது என்பதிற்கு இணங்க இந்திரா தனது குழந்தைப்பருவத்தில் எதிர்கொண்ட எதிர்மறையான வாழ்க்கை பிற்காலத்தில் எந்த வழியையும் கையாண்டு தனக்கு சுற்றி ஒரு ஆளுமையை உருவாக்கி ஆட்சி செய்து தனது வீழ்ச்சியையும் அதை விட வேகமாக அமைத்து கொண்டு விட்டார். . இந்திராணிக்கு பின்பற்ற தகுந்த நல்ல ஆளுமைகள் வீட்டிலும் பெறவில்லை. ஒரு வித அச்ச உணர்வுடன் தான் குழந்தைப்பருவம் கடந்திருக்க வேண்டும்

இந்திராணி மோசமான தந்தையால் வளர்க்கப்பட்டவள் , தாஸ் என்ற பொறுப்பற்றவனுக்கு இரு பிள்ளைகளை பெற்றவர். தன் வாழ்க்கையை எல்லா நெறிகளையும் அச்சத்தையும் மீறி உருவாக்க விளைய சீட்டு கெட்டுபோல் வீழ்ந்து நொறுங்கி சின்னா பின்னமாக கிடக்கின்றது அவர் வாழ்க்கை!. 


இன்று தொழில் , வெற்றி, பதவி அதிகாரம் என்ற நிலையில் நெறிகளை மீறுவதை ஒரு பொருட்டாகவே பல பெண்கள் எடுத்து கொள்வதில்லை. அழகும்  திறமையும் இருந்தால் எந்த காரியவும் கைகூடி விடலாம் என்ற மிதப்பில் திரியும்  பல பெண்களுக்கான பாடம் தான் இந்திரா முகர்ஜி.   பீட்டர் முகர்ஜி போன்றோர். வேலைக்கு வந்த பெண்ணை மனைவியாக்கி தன் பெற்ற பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும்  நிம்மதிக்க்கும்  பங்கம் விளைவிக்கின்றனர். 

இந்திரா முகர்ஜி தன்னை யாரும் மிஞ்ச இயலாது என இருமாப்பு கொண்டிருக்க தன் மகள் தனக்கு போட்டியாக வருகின்றாள் என்றதும் கொலைக்கு  துணிந்து உள்ளார் . இந்திராணி ஒரு மோசமான சமூக அமைப்பின் இரையாகி பலரை இரையாக்கும் தருணத்தில் சட்டத்தின் பிடியில் மாட்டியுள்ளார். எவ்வளவு வேகமாக வாழ்க்கை என்ற ஏணிப்படியில் ஏறினாரோ அதை விட வேகமாக சறுக்கி அகலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றார். ஆனால் இவரை பகடையாக அல்லது இரையாக அனுபவித்த இவர் வளர்ப்பு தகப்பன், முதல் கணவன்,  இவர் தாய், போன்றோருக்கும் தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும்  இச் சட்டங்கள். 

இந்திரா மகனும் தனது வீட்டில் மோசமாக சில நடைவடிக்கைகளில்  ஈடுபட்டு இருப்பதாகத்தான்  அயல்வீட்டு ஜனங்கள் கூறியுள்ளனர்.  மோசமான பால்ய குழந்தைப்பருவம் இந்திராணி போன்றோரை ஜெயில் வரை எட்ட வைக்கின்றது. அவர்கள் நடைவடிக்கைகளில் மனித இயல்பு குறைந்த மிருக இயல்பே மேல் ஓங்கி வருகின்றது. தனக்கு இடைஞ்சலாக வருபவர் மகளாக இருந்தால் கூட அவர்களை இல்லாது செய்யவே துணிந்துள்ளார். ஷீனாவும்  தாறுமாறான வழியை தேர்ந்தெடுத்து பரிதாபமான முடிவை அடைந்தவர் என்றே புலன்படுகின்றது/.

தேசிய குற்றவியல் தரவுகள் கூட உணர்த்துவது இதையே ஆகும். இந்தியாவில் தினம் 93 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 94% பெண்களும் தங்களுக்கு மிகவும் தெரிந்து அறிமுகம் ஆனவர்களாகவே பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர்.  குழந்தைப்பருவம் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான காலமாக உள்ளது. ஆனால் அந்த காலயளவில் தான் பல குழந்தைகள் புரக்கணிக்கப்ப்டுகின்றனர் பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர். இவர்கள் கொண்டதை  திரும்பி தர ஆரம்பித்தால் சமூகம் இது போன்ற அவலங்களுக்கு தான் சாட்சியாக மாறும்..இந்திராணி கூட அவ்வித அவலத்தின் பிரதிபலிப்பு தான்.

3 Sept 2015

ஆறாத சோகங்கள் கொண்ட சில மரணங்கள்!

என் மாணவர் மனம் குமுறி அழுதது இன்று மறக்க இயலாத துக்கமாக மாறி விட்டது. அந்நேரம் அவரை ஆறுதல்ப்படுத்தி அவர் கவலையை துலைப்பதை தடுப்பதை  விட அவர்  அழுது தீர்க்கட்டும் என விட்டு விட்டேன். பார்க்க தெனாவட்டாக எதையும் சந்திக்கும் துணிவுள்ளவர்கள் போல் காட்டி கொள்ளும் இளம் குழந்தைகள் மனதில் கிடக்கும் துக்கங்கள் என்னை ஆச்சரியத்தில்,ஆழ்த்தியது, மறுபுறம் சிந்திக்க வைத்தது. .

அவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் வேளையில் ஓர் புது தோழன் கிடைத்துள்ளான். ஏதோ சில காரணங்களுக்காக அவர் நண்பரிடம் சில நாட்களாக பேசவில்லை. நண்பன் பேருந்து பயணத்தின் போது பேச முயன்றுள்ளார்.  இவரோ தவிர்த்து விட்டார்.   ஏமாற்றமடைந்த நண்பன் பேருந்து படிக்கட்டில் நின்று  பயணிக்க நினைக்க, தவறுதலாக கீழை விழுந்து இறந்து விட்டார்.  நண்பனின் தாய் அழுதது, நண்பன் இறந்து கிடந்த கோர  காட்சி மறக்க இயலாது என் மாணவனை ஆறுதல் கொள்ளாத வண்ணம் கவலையில் ஆழ்த்தி விட்டது.   ஒரு வேளை நண்பனிடம் தான் பேசியிருந்தால் நண்பன் தன் அருகில் நின்றிருப்பானோ, விபத்து நடந்திருக்காதோ என்ற சிந்தனை அவர் மனதை குத்தி நோகடிக்கின்றது. அவர் குமுறி அழுத போது வகுப்பு தோழர்கள் இனி பேச வேண்டாம் என தடுத்தும் அவர் தன் சோகத்தை கொட்டி தீர்த்து விட்டு சென்றாலும் தன் இருக்கையில் சென்றும் அழுது கொண்டிருந்தார்.

அவர் நண்பர் இறந்தது  நண்பனின் கவனக்குறைவான பயண முறையால் மட்டுமே. ஆனால் பேசக்கூடாது என்ற தன் பிடிவாதம் தன் நண்பனின் மரணத்திற்கு காரணமாகி விட்டது என்று எண்ணி இப்போதும் அழுது புலம்புவது மனதை கனக்க செய்வதாகத்தான் இருந்தது.

என் மாணவனின் நிலைவிட்ட அழுகை என் 20 வருடங்களுக்கு முன் என்னுடன் படித்த  தோழிகளை நினைவுப்படுத்தியது. ஒல்லியான அழகானவள் என் தோழி. அவள் பெயர் 'ரஞ்சனி' என்றிருந்தது . எப்போது சிரித்து கொண்டிருக்கும் போலுள்ள அவள் முகம் இன்று நினைவில் உள்ளது. அவள் சுருண்ட முடிகள் சுருளுகளாக அவள் கழுத்தை ஒட்டிய வண்ணமே இருக்கும். ஒரு நாள் வீட்டிற்கு அருகிலுள்ள சுற்று மதிலற்ற குணற்றில் கால் வழுதி இறந்து கிடந்தாள் என அறிந்தோம்.   இனி அவள் வர மாட்டாள் என்ற உண்மையை புரிந்து கொள்ள  மிகவும் கடிமனபட்டோம். 

ஜெயாவை நினைத்தால் இன்றும் ஆச்சரியம். அவள் ஆண்களை போன்று தைரியமான பெண்.  நடப்பதில், பேசுவதில், அவள் செயல்களில் ஒரு வீரம் இருக்கும். உயரம் குறைந்து இருந்தாலும் ரவுடி பசங்களை அடித்து விடுவாள். செம்பட்டை  நிறத்திலுள்ள கூந்தலை குத்தலாக கட்டியிருப்பாள். அவள் சகோதரி ஒரு சம்மனசு போல் தோற்றம் கொள்ளும் முகம். நீளமான கால் எட்டும் வரையுள்ள முடி கொண்ட பெண். அவள் என் சகோதரர் வகுப்பு தோழி என்பதால் சிரித்து கொண்டே செல்லும் முகம் நிதம் கண்டுள்ளேன்.  .அவர்கள் சகோதரர்கள் பள்ளிக்கு வருவதே ஓர் அழகு. அவளுடைய இளைய  தம்பி புத்தககட்டை இவளே சுமந்து வருவாள்.  அவர்கள் பள்ளிக்கு சேர்ந்தே வருவார்கள். தம்பியும் தங்கையும் ஆங்கில பள்ளியில் படித்தனர். இவள் அரசு பள்ளியிலும் எங்களுடன் படித்தாள். அவளும் அவள் சகோதரிகள் மூன்று பெயரும் ஒரே நாள் தற்கொலை செய்து இறந்தது  இன்றும் நடுக்கும் நினைவுகளாகவே உள்ளது.  ஒரு தாயிமன் மேலுள்ள கோபம் இந்த நிலைக்கு இவர்கள் நாலு பேரையும் எட்ட வைத்தது  மகா துயரே!

அந்த எஸ்டேற்றில் இருந்த பாசனவசதிக்கான குளத்தில் சாடும் முன் அவர்கள் உடைகள் விலகாத வண்ணம் செப்டி பின்னால்(ஊக்கால்) உடையை சரி செய்து வைத்திருந்தனர்.  இருந்தும் அவர்கள் இறந்த போது அவர்களை கரையில் கொண்டு இட்டு பரிசோதித்ததும் அவர்கள் அணிந்த உடைகள் பற்றி பின்பு சிலர் கதைத்த கேட்டு அவர்கள் மரணப்பட்டதை விட வருந்தினேன். பல காரணங்கள் கொண்ட பல மரணங்கள் நம் வாழ்க்கையில் கண்டிருந்தாலும் நம் பள்ளிப் பருவத்திலுள்ள சில மரணங்கள் அழுத்தமான சில நினைவுகளை நமக்கு தந்து தான் செல்கின்றது.  நினைவுகளுடன் சில குற்ற உணர்ச்சியும் சேர்ந்து தத்தளிக்கும் என் மாணவரை தேற்ற வழியற்று நானும் துன்புறுகின்றேன்  இன்று !