3 Dec 2016

Black( கறுப்பு)

2005 ல் திரைக்கு வந்த ஹிந்தி திரைப்படமாகும் பிளாக். கண் பார்வை மற்றும் காது கேட்கும் திறனற்று பிறந்த ஹெலன் கெல்லர் என்ற பெண்மணி வாழ்க்கையை தழுவி வெளிவந்த படத்தின் தழுவலாகும் இப்படம்.


படத்தின் கதை ஒரு நினைவு தொகுப்பாக விரிகின்றது. தனக்கு கல்வி கற்பித்த; தற்போது அல்சிமேர் நோய் தாக்கிய தன் ஆசிரியரை சந்திக்க மாணவி முயல்வதும் பி சந்திப்பதுமாக படம் துவங்குகின்றது.  

குடி பழக்கமுள்ள ஆசிரியர்(அமிதாப்)   மிஷேல் என்ற பணக்கார வீட்டு குழந்தைக்கு கல்வி கற்பிக்க வந்து சேர்கின்றார்.  குழந்தை மிகவும் முரட்டுத்தனமாக உள்ளது. முள்ளை வளர்ச்சி பார்வை கேள்வித்திறன் இல்லை என்ற நிலையில் வளர்க்கப்படுகின்றது.  இருட்டில் வாழும் மன உளச்சலில்  நற்பண்பும் கற்க இயலாது  ஒரு இயலாமையின் உச்சத்தில் வாழ்கின்றது. அக்ககுழந்தையின் எச்செயலும் வீட்டிலுள்ளவர்களுக்கு தொல்லையாக முடிகின்றது. குழந்தையை விடுதியில் அனுப்பி விடலாம் என தகப்பன் முன்மொழிய வேண்டாம் என்ற பிடிவாதத்தில் தாய் என மனகலக்கத்தில் நாட்கள் கடத்துகின்றனர். இத்தருணத்தில் தான் ஆசிரியர் வந்து சேருகின்றார். ஆசிரியர் குழந்தையை நல்வழிப்படுத்த, கற்பிக்க எடுக்கும் வழி பெற்றோரை சங்கத்திற்குள்ளாக்குகின்றது.  எங்கள் குழந்தைக்கு நீங்கள் ஆசிரியராக இருக்க வேண்டாம் என  பிடிவாதமாக  வெளியேற்ற முடிவெடுக்கின்றனர், ஆனால்  அறிவான இக்குழந்தையை விட்டு விட்டு செல்ல மனம் வரவில்லை ஆசிரியருக்கு.  மிகவும் கடினமாக முயற்சியுடன் முதல் வார்த்தை தண்ணீர் என்பதை   செயல்வழி கல்வி மூலம் கற்று கொடுக்கின்றார். பெற்றோருக்கு நம்பிக்கை பிறக்க ஆரம்பிக்கின்றது. கைவிரல்கள் வழியாக  தொடர்பாடல் பேண கற்று கொடுப்பது வழியாக கல்வி துவங்குகின்றது. https://www.youtube.com/watch?v=JUkZAOvgxPs

பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்கின்றார். அந்த பருவத்தில் மாணவிக்கு ஆசிரியர் மேல் காதல் எழுகின்றது. ஆனால் ஆசிரியர் மிகவும் கவனமாக மாணவியை கையாளுகின்றார். மாணவியால் கல்லூரி படிப்பில் நினைத்தது போல் வேகமாக எழுதி மதிப்பெண் பெற இயலவில்லை.   கல்லூரி படிப்பை நினைத்த படி தொடர இயலாத மன உளச்சலில் இடையில் நிறுத்தி விட முடிவெடுக்கின்றார் மிஷேல். இருப்பினும் ஆசிரியரின் முயற்ச்சியின் பெயரில் படிப்பை தொடர்கின்றார்.  12 வருட உழைப்பால் பட்டப்படிப்பை முடிக்கின்றார்.


தனக்கு இளைய தங்கைக்கு திருமண நாள் வருகின்றது. தன்னை போல ஊனமுற்றோர் திருமணம் செய்ய இயலாது என்பதும் வருத்ததை தருகின்றது. திருமண நாள் முந்தின நாள் விருந்தில்,  பெற்றோர்களால்     தனக்கு கிடைக்க வேண்டிய கவனிப்பு  தன் சகோதரியை வளர்க்கும் சூழலில்   மறுக்கப்பட்டதில்   மிகவும் காள்புணர்ச்சி கொண்டு பேசுகின்றார். ஆனால் மிஷேல் ஆகட்டும் வாழ்க்கையை மிகவும் ஆக்கபூர்வாக நேர்மறை எண்ணத்துடன் பதில் தருகின்றார்.  இருப்பினும் அன்பு என்றால் என்ன? காதல் என்ற உணர்வை அறிய  அவள் மனம் விளைகின்றது. தன் ஆசிரியரிமே விளக்கும் படி கேட்கின்றார்.   


இப்படியாக மிகவும் சவாலான வாழ்க்கை வாழ்ந்து மறைந்த பல பண்முகத்தனமை கொண்டு விளங்கிய கெலன் கெல்லர்  வாழ்க்கையை நினைவுப்படுத்தும் இப்படம் எடுக்கப்பட்ட  விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. அழகிய காட்சிப்படுத்தலும் அந்த பழம் காலம் நோக்கி நம்மை நகர வைத்ததும் படத்தில் சிறப்பு அம்சமாகும். சிறு குழந்தையாக நடித்திருந்த ஆயிஷா கபூரின் நடிப்பு திறன் இளம் மங்கையாக நடித்திருந்த ராணி முகர்ஜிக்கு ஒத்ததாக இருந்தது.


இந்த படத்தில் நடிப்பதற்கு என்றே அமிதாபும், ராணி முகர்ஜியும் பார்வையற்றவர்களுக்கான எழுத்து மொழி பெரியிலி ஏழு மாதம் கற்றுள்ளனர். மேலும் படப்பிடிப்பு தளத்தில் கண்பார்வையற்ற குழந்தைகள் இவர்களுக்கு செய்கை மொழி கற்று கொடுத்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் சுதந்திரத்திற்கு முந்திய ஷிம்லாவை   காட்சிப்படுத்தும் விதமாக  செட்டு போட்டு   மும்பையில் படமாக்கியுள்ளனர். 225 மிலியன் ரூபா செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான படமாகும் இது.


சஞ்சய் லீலா பான்சாலியின் இயக்கத்தில் ராணி முகர்ஜி நடிப்பில் வெளிவந்த இப்படம் தேசிய மற்றும் உலக சினிமா அருங்குகளிலும் பல விருதுகளை பெற்றுள்ளது.  டைம்ஸ் இதழ், உலக அளவில் 2005 ஆம் ஆண்டு   வெளிவந்த திரைப்படங்களில்    பார்க்க வேண்டிய பத்து படங்களில் ஒன்றாக இப்படத்தை தெரிவு செய்துள்ளது இப்படத்திற்கான உலக அளவிலான  பெருமையாகும்.  ராணி  முகர்ஜிக்கு இரண்டாவது முறையாக சிறந்த நடிகைக்கான பிஃலிம் பெஃயர் விருது பெற்று தந்த, அமிதா பச்சனுக்கு இரண்டாவது  முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கிட்டச்செய்த படமாகும்.     இப்படத்தை தழுவி 2013 ல் பெனிம் டன்யாம்(Benim Dünyam) என்ற துர்க்கிப்படம் வெளிவந்துள்ளது   இதன் சிறப்பாகும்.

நமது தமிழ் நடிகர்கள் 60 வயதை கடந்த பின்பு  இளம் நடிகைகாளுக்கு ஜோடி சேரும்     நாயக கதாப்பாத்திரத்தில் தான் நடிப்போம் என பிடிவாதம் கொள்ளும் போது தன் வயதிற்கு ஏற்ற கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்கும் அமிதாப் போன்றவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். நல்ல கதைத்தளம், கதாப்பாத்திரப்படைப்பு, திரைக்கதை என எல்லாஅ வகையிலும் போற்றப்பட வேண்டிய படம் இது.

ஓர் ஆசிரியர்  மாணவி உறவிற்கு எடுத்துக்காட்டாக திகழும் படம். மேலும் உடல் ஊனத்தை தன் உழைப்பால் முயற்சியால் அறிவின் மேலுள்ள ஆழத்தால் எவ்வாறாக களைகின்றார் வாழ்க்கையில் வெற்றி கொள்கின்றார் என்பதற்கும் எடுத்துக்காட்டான திரைப்படம் இது.


1 comment:

  1. சுவாரஸ்யமான பதிவு...

    ReplyDelete