30 Mar 2018

புனித வெள்ளி தரும் உண்மைகள்



இன்று பெரியவெள்ளி அதாவது புனித வெள்ளி கொண்டாடப்படுகின்றது. எதனால் யேசு நாதர் கொல்லப்பட்டார்? யார் கொன்றார்கள்’? எனக்கேட்டால்  ஆழமான கருத்துக்கள் மரணத்தை பற்றி விளங்கும்.

மரணம் நிர்ணயிக்கப்பட்ட்து , அதை யாராலும் தவிற்க இயலாது. முன்பே அறிந்து கொண்டால் மிகவும் துயர் தருவது, அவ்வகையில் யேசுவின் மரணம் பற்றி அவருக்கே தெரிந்திருந்த்து. அந்த 'வியாழன்' விருந்து தான் தன் கடைசி உணவு நேரம் என்றும் தெரிந்திருந்த்து. எப்படி கொல்லப்படுவோம் என்றும் தெரிந்திருந்தார். இது ஒரு நிமித்தம் இது முன் கூட்டி வகுக்கப்பட்ட தொடர்ச்சியான சம்பவங்களும்  என அறிந்திருந்தார்.

யேசு நாதர் கடவுளிடம், இயன்றால் இந்த துன்பத்தை என்னிடம் இருந்து விலக்கி விடுங்கள் ஆனால் என் விரும்பமல்ல உங்களுடைய விருப்பமே  என பிராத்திக்கின்றார். அவர் கவலையால் வியர்வை துளிகள் இரத்த துளிகளாக விழுந்தது என சொல்லப்பட்டுள்ளது.

காட்டி கொடுக்க போவதும் உற்ற தோழன் யூதாஸ் என்றே தெரிந்திருப்பார். பூடகமாக தெரிவித்திருப்பார், காட்டிக்கொடுப்பவனுக்கு ஐய்யோ கேடு என்று என்று கூறுவார். யூதாஸ் ஒன்றும் தெரியாதது போல் 'நானா நண்பரே' என வினவுவார்.  யூதாஸ்  பண விடையத்தில் அக்கறை கொண்டவராக இருந்துள்ளார். ஒரு முறை  ஒரு பெண் பரிமள தைலத்தை காணிக்கையாக பூசிய போது பணத்தை ஏன் விரளப்படுத்த வேண்டும் அதை விற்று ஏழைகளுக்கு கொடுக்கலாமே  என கேள்வி எழுப்பியுள்ளார்.
30 வெள்ளிக்கசை பெற காட்டி கொடுத்தார் என எழுதப்பட்டுள்ளது. அந்த பணத்தில் நிலம் வாங்கியதாகவும் பின்பு மனம் உடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் யூதாஸ் இல்லாவிடில் கடவுளின் திட்டம் நடைபெறாது போயிருக்கும். யேசுவை காட்டி கொடுத்தாலும் அவர் அற்புத வல்லமையில் தப்பித்து கொள்வார் என்ற தப்பிதங்கள் இருந்திருக்கும். எது எப்படியோ யேசுவை பற்றி பேசும் போது  முத்ததால் காட்டி கொடுத்த யூதாஸ் நினைவிற்கு வருகின்றார். கிறிஸ்தவத்தின் அடிப்படை மனித இரட்சிப்பின் பணியில் யூதாஸின்  இடத்தை மறுக்க இயலாது.

மரணத்தை யாராலும் தள்ளிபோட முடியாது, அனுவிப்பதை அனுபவித்தே கடந்து செல்லவேண்டும். எதுவும் நிரந்தரமல்ல என பல சிந்தனைகள் ஊடாக புனித வெள்ளி கடக்கின்றது.  கடந்த வாரம் ஓசானா என்று பாடி ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம் தான் சிலுவையிலும் அறைய கொண்டு போகின்றது.

யேசுவை யாருக்கு பிடிக்கவில்லை? யூதரான யேசுவின் மத குருக்களுக்கு. எதனால், யேசு மாறுபட்டு சிந்தித்தார், மதகுருக்களை சபித்தார் திட்டினார். சட்டப்படி கோயிலில் இருக்கும் பெரிய மனிதர்களால் தண்டிக்க இயலாது. அவர்கள். அரசு அதிகாரி கவர்னர் பிலாத்துவிடம் கொண்டு செல்கின்றனர். நாட்டின் ஆட்சியை பிடிப்பதாகவும் யூதர்களின் ராஜாவென்று கூறுகின்றார் என்கின்றனர். பிலாத்துவும் ஒன்று இரண்டு கேள்வியை கேட்கின்றார். பிலாத்தோ ‘ நான் ஏதும் குற்றம் காணவில்லையே’  என கைவிரிக்கின்றார். கலீலி முதல் யூத தேசமெங்கும் அவதூறு செய்திகள் பரவ விடுகின்றான் என்கின்றனர். பிலாத்துவுக்கு ஒரு தந்திரம் தோன்றுகின்றது. கலீலி என்றால் ஏரோதிவிடம் கொண்டு செல்லுங்கள் என்கின்றனர்.

ஏரோதுவுக்கு யேசு செய்யும் அற்புதங்களை கண்டுவிடலாம் என ஆர்வம் கொள்கின்றான். யேசு பதிலுரைக்காததால் சில கேலிகள் பேசி ஒரு பகிட்டான உடையை அணுவித்து பிலாத்திடமே அனுப்பி விடுகின்றான். அன்று முதல் எதிரணியில் இருந்த பிலாத்துவும் ஏரோதும் நட்பாக மாறுகின்றனர். ஏரோது யூத ராஜ வம்சம், பிலாத்தோ ரோம அரசின்   பிரதிநிதி.. அப்படி ஒரு நல்ல மனிதனை தண்டிப்பது மூலம்  இரு நாட்டு ஊழல்  தலைமைகள் ஒன்றாகின்றது.

யேசுவின் முதன்மை சீடர் பேருது, ‘யேசுவே யார் உம்மை விட்டு போனாலும் நான் உன்னுடன் இருப்பேன்’ என தற்பெருமை கொள்கின்றார். யேசுவோ இன்றைய தினம் கோழி கூவும் முன் மூன்று தடவை என்னை மறுதலிப்பாய் என பேருதுவின் பெருமையை உடைக்கின்றார்.

கிறிஸ்துவின் சீடர்களுக்கு கூட பெரிய ஏமாற்றம். அவர்கள் தொழிலை விட்டு விட்டு யேசுவை பின் தொடர்ந்ததும்; யேசு ஒரு போராட்டத்தின் ஊடாக  ரோமா சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தில் இருந்து யூதாவை மீட்பார் நமக்கு பதவிகள் கிடைக்கும் என்ற மோகம் தான். ஆனால் யேசு என்னுடைய ராஜ்ஜியம் இதுவல்ல கூறிய போது கலங்கி போயினர். அந்த ஏமாற்றம் கூட யூதாஸை துரோகியாக மாற்றியிருக்கலாம். யூதாவின் நற்செய்தி என்று பிற்காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. அதில் உள்ள கதைகள் நாம் தற்போது வாசிக்கும் செய்திகளுக்கு மிகவும் மாறுபட்டதாகவே உள்ளது. 

பிலாத்துவிடம் மறுபடியும் கொண்டு வரப்படுகின்றார். சாட்டையினால்  அடித்து விட்டு விடுவிக்கவா என ஆராய்கின்றான். ஜனங்களோ இல்லை இல்லை கொன்றே ஆக வேன்டும் எனக் கொக்கரிக்கின்றனர்.
அடுத்த வாய்ப்பாக நபது குடியரசு தினத்தன்று விடுவிக்கும் குற்றவாளிகள் சலுகை அன்றும் இருந்துள்ளதை கையிலெடுக்கின்றான். பண்டிகை நாட்களானதால் விடுவிக்கவா என்றதும், இல்லை இல்லை யேசுவை சிலுவையில் அறையுங்கள் கொலைகாரன் கொள்ளைக்காரனான பராபாஸை விடுவிக்க கோருகின்றனர். எந்த வழியும் அற்று பிலாத்து கை கழுவி விட்டு இந்த மனிதனின் இரத்த பழி என்னை சேராது இருக்கட்டும். உங்களுக்கு தேவையானதை நீங்கள் செய்யுங்கள் என யேசுவை  மதத்  தலைவர்களிடம் விட்டு கொடுக்கப்படுகின்றார்.

யூதர்கள் வழக்கபிராகாரம் சிலவை மரணம் மிகவும் கேவலமானது. ஆனால் அதையே யேசுவுக்கு நிர்ணயிக்கின்றனர். இறந்த யேசுவை அடக்கம் செய்ய பொது கல்லறை கிடைத்த பாடில்லை. ஜோஸப் என்ற மனிதரின் தனியார் இடத்தில் தான் அடக்கம் செய்யப்படுகின்றார்.

யேசு யாரை திட்டினார் ? பணக்காரர்கள் சமூகத்தில் அந்தஸ்தில் இருந்து மக்களை சுரண்டி பிழைத்தவர்கள், கடவுள் பெயரில் மனிதர்களுக்கு அனாவசிய சட்டங்கள், ஆசாரங்கள் வழங்கி ஒடுக்கி வந்த புரோகிதர்களை, இரட்டை வாழ்க்கை வாழ்பவர்களை, கோயிலில் நடக்கும் வியாபாரத்தை, பெண்கள் மேல் கொன்டுள்ள இந்த சமூகத்தின் கேலியான பார்வையை கண்டித்தார்.  கிறிஸ்துவின் புரட்சி நாட்டை பிடிப்பதிலோ அதிகாரத்தை கைபற்றுவதிலோ இருக்கவில்லை. மனிதனின் சிந்தை, செயலிலுள்ள விடுதலையை, உண்மைக்காக போராட்டும் குணத்தை கற்று கொடுத்தார்.

  • இவர்கள் செய்வது என்னவென்று இவர்கள் அறியவில்லை. மன்னித்தருளும்
  • என் உடையையும் எடுத்து கொண்டார்கள்
  • கடவுளே ஏன் என்னை கைவிட்டீர்  போன்ற வார்த்தைகள் துயர் நேரத்திலும் மற்றவர்களை நோக்கும் பரிவை வாழ்க்கையின் நிஜத்தை உணர்த்துகின்றது.

  • உன்னை போல் அடுத்தவனை நேசி
  • உன் அன்பு உண்மையானதாக இருக்கட்டும்,
  • ஆசாரங்களில் அல்ல மனித நேயத்தில் தான் கடவுளை காண இயலும் என கற்று கொடுத்தார்.
  • நீதி, நியாயம் பேசுபவர்களின் வாழ்க்கை துன்பம் வழியே கடந்து போகும்.
  • பண ஆசை பல தகாத செயல்களுக்கு வழி வைக்கின்றது.
  • ·நம் நெருங்கிய வட்டத்தால் (முத்தம்) தான் துன்பத்திற்கு உள்ளாகுவோம்
  • துன்ப நேரத்தில் யாரும், மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் கூட அருகில் இருக்க மாட்டார்கள்.
  • வாழ்க்கையில் நடப்பது நடந்தே தீரும்,
  • வாழ்க்கை முன் கூட்டியே  நிர்ணயிக்கப்பட்டது
  • · கடந்து போவதே வாழ்க்கை வெற்றி  என பல உருக்கமான சிந்திக்க வைக்கும் கருத்தை சொல்லி செல்கின்றது இன்றைய தினம்.
         யாரையும் நாம் விதிக்கு உட்படுத்த இயலாது. யூதாஸ் இல்லாவிடில் யேசுவின் மீட்பு பணி வெற்றி பெற்றுருக்குமா?
·      யூதா தேசத்தில் துவங்கிய யேசு என்ற மனிதனின் சிந்தனை இன்று உலகில் அனைவரையும் ஆளுமை செய்வதை மறுக்க இயலாது.


1 comment:

  1. புனித வெள்ளியென்று படித்த மிக சிறந்த பதிவு

    ReplyDelete